Kathir News
Begin typing your search above and press return to search.

பஞ்சாப் முதலமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காரைக்காலில் பா.ஜ.க. மனித சங்கிலி ஆர்ப்பாட்டம்!

பஞ்சாப் முதலமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காரைக்காலில் பா.ஜ.க. மனித சங்கிலி ஆர்ப்பாட்டம்!

ThangaveluBy : Thangavelu

  |  11 Jan 2022 9:26 AM GMT

பஞ்சாப் மாநிலத்திற்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக சென்ற பிரதமர் மோடியின் பாதுகாப்பு விஷயத்தில் மிகப்பெரிய குளறுபடியை செய்த காங்கிரஸ் முதலமைச்சரை கண்டித்து, புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் பாஜக சார்பில் மனித சிங்கிலி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த மனித சங்கிலி ஆர்ப்பாட்டத்துக்கு அமைச்சர் சாய் சரவணன்குமார் தலைமை தாங்கினார். இதில் பாஜக மாநில துணை தலைவர் அருள்முருகன், மாவட்ட தலைவர் துரைசேனாதிபதி மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் என திரளாக கலந்து கொண்டனர்.

அப்போது கலந்து கொண்டவர்கள் பஞ்சாப் காங்கிரஸ் அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். உடனடியாக அம்மாநில முதலமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். பிரதமருக்கு பாதுகாப்பு வழங்குவதில் மிகப்பெரிய சதி வலையை ஏற்படுத்தியுள்ளனர் என்று அமைச்சர் சாய் சரவணன்குமார் கூறினார்.

இது குறித்து அமைச்சர் கூறியதாவது: நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக சென்ற பிரதமர் மோடியின் பாதுகாப்பு விஷயத்தில் கவனக்குறைவாக காங்கிரஸ் அரசு செயல்பட்டுள்ளது. உடனடியாக அம்மாநில முதலமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். மேலும் அவர் மீது சட்டப்படியான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Source, Image Courtesy: Daily Thanthi

Next Story
கதிர் தொகுப்பு
Trending News