Kathir News
Begin typing your search above and press return to search.

புதுச்சேரியில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பெண் சடலமாக மீட்பு.!

புதுச்சேரியில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பெண் சடலமாக மீட்பு.!

புதுச்சேரியில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பெண் சடலமாக மீட்பு.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  22 Feb 2021 4:50 PM GMT

புதுச்சேரியில் நேற்று பெய்த மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வளிமண்டல மேலடுக்கில் மேற்கு திசை காற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நேற்று முதல் மழை வெளுத்து வாங்கி வருகிறது. புதுச்சேரியில் பெய்து வரும் மிக கனமழையால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்தது. அது மட்டுமின்றி சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

இந்நிலையில், நேற்று புதுச்சேரியில் ஏற்பட்ட வெள்ளத்தில் இருசக்கர வாகனத்தோடு பெண் ஒருவர் அடித்துச் செல்லப்பட்டார். பாரதிபுரத்தைச் சேர்ந்த ஹசினா பேகம் என்ற பெண் வாசலில் நின்றிருந்த இருசக்கர வாகனத்துடன் அடித்துச் செல்லப்பட்டார். அவரை தீயணைப்புத் துறையினர் தீவிரமாக தேடி வந்த நிலையில், இன்று ஹசினா பேகம் சடலமாக மீட்கப்பட்டார். அவரது மரணம் புதுச்சேரி நகர் பகுதியினரை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

புதுச்சேரியில் நாராயணசாமி முதலமைச்சராக இருந்து எந்தவிதமான அடிப்படை வசதிகூட செய்து வைக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். இதனாலேயே அவரது ஆட்சி கவிழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News