Kathir News
Begin typing your search above and press return to search.

அரசு கலை கல்லூரியில் பிரமாண்ட வேலைவாய்ப்பு முகாம்!

தாகூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற முகாமில் ஏராளமான இளைஞர்கள் குவிந்தனர். இதில் 2 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அரசு கலை கல்லூரியில் பிரமாண்ட வேலைவாய்ப்பு முகாம்!

ThangaveluBy : Thangavelu

  |  9 Jan 2022 3:23 AM GMT

தாகூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற முகாமில் ஏராளமான இளைஞர்கள் குவிந்தனர். இதில் 2 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

புதுச்சேரி அரசு தொழிலாளர்துறை வேலை வாய்ப்பகம் சார்பில் லாஸ்பேட்டை தாகூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் 30க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்றது. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களை நிரப்புவதற்காக இம்முகாம் நடைபெற்றது.

இந்த முகாமை அமைச்சர் சந்திர பிரியங்கா தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் சசிகாந்தததாஸ் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த முகாமில் 2 ஆயிரம் இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஏராளமான பெண்களும் பங்கேற்று தங்களுக்கு பிடித்தமான நிறுவனங்களை தேர்வு செய்தனர்.

Source, Image Courtesy: Daily Thanthi

Next Story
கதிர் தொகுப்பு
Trending News