Kathir News
Begin typing your search above and press return to search.

தி.மு.க கரைவேட்டியை மட்டும் கட்டி கொண்டு மானம், மரியாதையை காற்றில் பறக்க விடும் உடன்பிறப்புகள்.!

தி.மு.க கரைவேட்டியை மட்டும் கட்டி கொண்டு மானம், மரியாதையை காற்றில் பறக்க விடும் உடன்பிறப்புகள்.!

தி.மு.க கரைவேட்டியை மட்டும் கட்டி கொண்டு மானம், மரியாதையை காற்றில் பறக்க விடும் உடன்பிறப்புகள்.!
X

Mohan RajBy : Mohan Raj

  |  19 Nov 2020 8:26 PM IST

ஓர் கட்சியில் அடுத்த பத்து ஆண்டுகள் கழித்து யார் தலைவராக வருவார் என கேட்டால் யாருக்கும் தெரியாது ஆண்டவனுக்கு மட்டுமே தெரியும் என கூறுவர். ஆனால் தமிழ்நாட்டில் ஓர் கட்சியில் அடுத்த 25 ஆண்டுகள் கழித்தாலும் யார் தலைவராக வருவார் என்று கேட்டார் "டான்" என பதில் வரும் ஒரே கட்சி திராவிட முன்னேற்ற கழகம் மட்டுமே.

"தம்பி வா தலைமை ஏற்க வா" என தி.மு.க'வின் அடுத்த பொதுச்செயலாளராக நாவலர் நெடுஞ்செழியனை ஆக்கலாம் என முடிவெடுத்த அண்ணாதுரை அதை அவரிடம் சொன்னதுடன், ‘தம்பிக்கு கடிதம்’ வாயிலாகத் தனது விருப்பத்தை எழுதவும் ஆரம்பித்தார்.

அண்ணாதுரை அவர்களின் விருப்பத்திற்கு இணங்க 1955 ஏப்ரல் 24-ல் புதிய பொதுச்செயலாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுக்குழுக் கூட்டத்தைக் கூட்டினார் அண்ணாதுரை ஒருமனதாகத் தேர்வுசெய்யப்பட்டார் நாவலர் நெடுஞ்செழியன். பின் அண்ணாதுரை அவர்களின் மறைவுக்கு பிறகு தி.மு.க தலைமைக்கு சில சச்சரவுகள் வரும்போது அதனை சமயோசிதமாக கையாண்டு எம்.ஜி.ஆர் அவர்களின் காலில் விழுந்து கருணாநிதி தி.மு.க தலைவரானார். பின் நாவலர் நெடுஞ்சேழியனை தனியே அழைத்து வந்து அ.தி.மு.க'வை எம்.ஜி.ஆர் துவங்கியதெல்லாம் வரலாறு.

இப்படி எம்.ஜி.ஆரின் இரக்கத்தால் தி.மு.க தலைவரான கருணாநிதியின் வாரிசுகள் இன்று வரை தி.மு.க'வை ஆக்கிரமித்துள்ளனர். உயிர் தொண்டனாகவே இருந்தாலும் தி.மு.க'வில் செருப்பை கழட்டி வெளியில் விடுவதை போல் அந்த உடன்பிறப்பை செருப்பாக வெளியில் வைப்பார்களே தவிர பதவி தந்து அழகு பார்க்கமாட்டார்கள் கருணாநிதி'யின் வாரிசுகள்.

இதை உணர்ந்த உடன்பிறப்புகள் தி.மு.க'வில் இருந்து மானம், ரோஷத்துடன் வெளியேறினர். உணராத உடன்பிறப்புகள் மானம், மற்றும் ரோஷத்தை கழட்டி வீசிவிட்டு தி.மு.க கரைவேட்டியை மட்டும் கட்டிகொண்டு சுற்றி வருகின்றனர்.

நேற்று தி.மு.க'வின் பட்டத்து இளவரசர் உதயநிதியின் மகனான இளைய பட்டத்து இளவரசரான இன்பநிதிக்கு பிறந்தநாள். இன்பநிதியுடன் இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பதிவில் பகிர்ந்தார்.

உடனே உடன்பிறப்புகள் "எங்களின் எதிர்காலமே", "தி.மு.க'வின் தலையெழுத்தே", "தமிழக வருங்கால முதல்வரே" என ஒரு பதின் வயது பையனை வாழ்த்தி வார்த்தைகளை அள்ளி தெளித்தனர். என்னடா இது தி.மு.க'விற்கு வந்த சோதனை என நெட்டிசன்கள் நொந்து கொண்டனர்.

ஒருமுறை தி.மு.க'வின் எம்.பி'யும், சாராய ஆலே அதிபருமான டி.ஆர்.பாலு நாடாளுமன்ற விவாதத்தில் எம்.பி. ரவீந்திநாத்'திடம் கூறிய வார்த்தைகள் தான் ஞாபகம் வருகின்றன. "இங்கு முதுகெலும்பு உள்ளவர்கள் மட்டுமே பேசுகிறோம், உட்கார்" என்றார். தி.மு.க'வின் முதுகெலும்பு வலிமையை நினைத்து சிரிப்பு வருகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News