Kathir News
Begin typing your search above and press return to search.

திருட்டு கும்பலுக்கு கொள்ளை அடிக்க நல்ல நேரம் குறித்து கொடுத்த ஜோதிடருக்கு கெட்ட நேரம் ஆரம்பமானது

வீடு புகுந்து ரூபாய் ஒரு கோடியே 6 லட்சம் நகை, பணம் கொள்ளை அடித்த கும்பலைச் சேர்ந்த ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களுக்கு நல்ல நேரம் குறித்துக் கொடுத்த ஜோதிடரும் சிக்கனார்.

திருட்டு கும்பலுக்கு கொள்ளை அடிக்க நல்ல நேரம் குறித்து கொடுத்த ஜோதிடருக்கு கெட்ட நேரம் ஆரம்பமானது

KarthigaBy : Karthiga

  |  23 Aug 2023 4:30 PM GMT

மராட்டிய மாநிலம் புனே மாவட்டம் பராமதியை சேர்ந்தவர் சாகர் கோப்னே. இவர் சம்பவத்தன்று வேலை விஷயமாக வெளியூர் சென்றிருந்தார்.வீட்டில் அவரது மனைவி தனியாக இருந்தார். அப்போது திடீரென வீட்டில் புகுந்த ஐந்து பேர் கும்பல் மனைவியை கயிற்றால் கட்டி போட்டினார். சத்தம் போடாமல் இருக்க வாயை துணியால் கட்டினார். பின்னர் வீட்டில் இருந்த 95 லட்சம் ரூபாய், 11 லட்சம் மதிப்பில் நகைகளை கொள்ளை அடித்து விட்டு அந்த கும்பல் தப்பிக்கிறது .


பின்னர் பாதிக்கப்பட்ட பெண் ஒரு வழியாக கட்டை அவிழ்த்து போலீசுக்கு தகவல் கொடுத்தார். உடனே போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் கொள்ளையடித்துச் சென்ற ஐந்து பேரின் அடையாளம் தெரியவந்தது. சச்சின் ஜக்தானே, ராய்பா சவான், ரவிந்திரபோசலே ,துரியோதன் நிதின் மோரே என தெரிய வந்தது. இவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூபாய் 76 லட்சம் மதிப்புள்ள நகை பணத்தை பறிமுதல் செய்தனர். கொள்ளையர்களிடம் நடத்திய விசாரணையில் போலீசருக்கு அதிர்ச்சி கலந்த சுவாரஸ்ய தகவல் கிடைத்தது.


வீடு புகுந்து கொள்ளையடிக்க சுப நேரத்தை ஜோதிடர் ஒருவர் குறித்து கொடுத்ததும் அந்த ஜோதிடர் பெயர் ராம் சந்திர சாவ்லா என்றும் போலீசாரிடம் அவர்கள் கூறினர். இதை அடுத்து கொள்ளையர்களுக்கு நல்ல நேரம் குறித்து கொடுத்த ஜோதிடரை போலீசார் பொறிவைத்து கைது செய்தனர் . அதன் பின்னரே தனக்கு நேரம் சரியில்லை என்பதை ஜோதிடர் உணர்ந்தார். தற்போது அவர் சிறையில் கம்பி எண்ணி வருந்துகிறார்.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News