Kathir News
Begin typing your search above and press return to search.

பொது அறிவு கேள்விகளுக்கு விடை அளித்தால் இலவச ஆட்டோ பயணம் !

ஆட்டோ ஓட்டுநராக இவருடைய பொது அறிவு கேள்விகளுக்கு சரியான விடையை கூறினால், ஆட்டோவில் இலவச பயணம் செல்லலாம்.

பொது அறிவு கேள்விகளுக்கு விடை அளித்தால் இலவச ஆட்டோ பயணம் !

Bharathi LathaBy : Bharathi Latha

  |  27 Nov 2021 1:44 PM GMT

சிலரின் சிறப்பான யோசனைகளுக்கு நிச்சயம் மக்களிடம் பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கும் என்பது உண்மைதான். இது சாதாரண மனிதர்கள் முதல் பெரிய தொழிலதிபர்கள் வரை பொருந்தும். இப்படியொரு சிறப்பான விஷயத்தை செய்து வரும் ஒரு ஆட்டோ ஓட்டுநரின் வியப்பான முயற்சியை பற்றி தான் தற்பொழுது வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேற்கு வங்கத்தில் உள்ள ஹவ்ரா மாவட்டத்தை சேர்ந்தவர் சுரஞ்சன் கர்மகார். இவர் பல வருடங்களாக ஆட்டோ ஓட்டி வருகிறார்.


இவரின் தற்போதைய புதிய முயற்சி அவரின் வாடிக்கையார்களை பெரிதும் கவர்ந்துள்ளது. இவரை பற்றி சுரஞ்சன் ஆட்டோவில் பயணம் சென்ற சங்கலன் என்பவர் தனது முகநூலில் இந்த தகவலை பதிவிட்டுள்ளார். அதில் அவர், "நான் இன்று மிக சுவாரசியமான ஒரு நபரை சந்தித்தேன். அவரின் எலக்ட்ரிக் ஆட்டோவில் ரங்கோலி மாலுக்கு செல்ல நானும் என் மனைவியும் ஏறினோம். சிறிது நிமிடத்திற்கு பிறகு ஆட்டோ ஓட்டுநரான சுரஞ்சன் எங்களிடம் திரும்பி, "நான் கேட்கும் 15 கேள்விகளுக்கு நீங்கள் சரியாக பதிலளித்தால் சவாரி செய்யும் பணத்தை நீங்கள் தர வேண்டாம்" என்று கூறினார். என் மனைவிக்கு இதை கேட்டதும் ஆச்சரியமாக இருந்தது. ஆனால் எனக்கு, இவர் சவாரி செய்ய கூடுதல் பணம் வாங்குவதற்காகவே இப்படி செய்கிறார் என்று தோன்றியது" என்று அந்த பதிவில் சங்கலன் குறிப்பிட்டுள்ளார்.


பிறகு தன்னை பற்றி இந்த ஆட்டோ ஓட்டுநர் கூறுகையில், "பள்ளியில் படிக்கும்போது வீட்டில் பணம் இல்லாததால் 6 ஆம் வகுப்பை வரை தான் படித்தேன். ஆனால் அதன் பிறகு தினமும் இரவு 2 மணி வரை அன்றாட விஷயங்களை பற்றி படிப்பேன்" என்று கூறினார். மேலும் லிலுவா புத்தக அமைப்பில் உறுப்பினராக உள்ளதாகவும் இவர் குறிப்பிட்டார்.

Input & Image courtesy:google news


Next Story
கதிர் தொகுப்பு
Trending News