Kathir News
Begin typing your search above and press return to search.

அசாம் வெள்ள நிவாரண பொருட்களில் ராகுல்காந்தி புகைப்படம்! இயற்கைப் பேரிடரில் அரசியல் ஆதாயம் தேடும் காங்கிரஸ்!

அசாம் வெள்ள நிவாரண பொருட்களில்    ராகுல்காந்தி புகைப்படம்! இயற்கைப் பேரிடரில் அரசியல் ஆதாயம் தேடும் காங்கிரஸ்!

DhivakarBy : Dhivakar

  |  7 July 2022 2:09 PM GMT

வெள்ளத்தால் தத்தளித்துவரும் அஸ்ஸாம் மாநிலத்தில், 'வெள்ள நிவாரணம் வழங்குகிறோம்' என்ற பெயரில் ராகுல் காந்தி முகம் பதித்த வெள்ள நிவாரண பொருட்கள் அடங்கிய பைகளை, பாதிக்கப்பட்ட மக்களிடம் விநியோகம் செய்து, கீழ்த்தர விளம்பர அரசியலில் இறங்கியுள்ளது அம்மாநில காங்கிரஸ்.


அஸ்ஸாம் மாநிலம் கடந்த சில நாட்களாக தீவிர வெள்ள பாதிப்பில் தத்தளித்து வருகிறது. இருபத்தி மூன்று மாவட்டங்களில் உள்ள 18 லட்சம் மக்கள் வெள்ளத்தால் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க அசாம் மாநில அரசும், மத்திய அரசும் விரைந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.


இந்நிலையில் கடந்த திங்கட்கிழமையன்று, வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட 'சச்சார்' என்ற மாவட்டத்தில், இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஸ்ரீனிவாஸ் பீ.வி தலைமையில், காங்கிரஸ் சார்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கியுள்ளனர். அந்த நிவாரண பொருட்கள் அடங்கிய பைகளில் ராகுல்காந்தி மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர்களின் முகங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் சென்ற படகில் காங்கிரஸ் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களிடம் அரசியல் பிரச்சாரம் செய்யும் காங்கிரஸ்ஸை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். மேலும், இதே இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஸ்ரீனிவாஸ் பீவி, உத்தரபிரதேச மாநிலத்தில் ப ஏழை மக்களுக்காக யோகி அரசு உப்பு, பருப்பு மற்றும் ஆயில் பாக்கெட்கள் இலவசமாக விநியோகம் செய்தது. அந்த பொருட்களில் யோகி ஆதித்யநாத் மற்றும் பிரதமரின் புகைப்படங்கள் அச்சடிக்கப்பட்டதை, இதே ஸ்ரீனிவாஸ் பீவி கடுமையாக விமர்சித்தார்.

காங்கிரஸின் இத்தகைய பச்சோந்தி அரசியலை தேசிய அரசியல் விமர்சகர்கள் மற்றும் பொதுமக்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

OpIndia


Next Story
கதிர் தொகுப்பு
Trending News