பி.டி.ஆரின் அறிவு சாராசரிக்கும் கீழ்! வங்கி பணியில் இருந்தே விலக சொன்னார்கள் - வெளிநாட்டவர் போட்டுடைக்கும் பகீர் தகவல்!
By : Kathir Webdesk
டிவிட்டரில் ராமன் என்ற ஐடியில் வெளியாகியிருக்கும் வீடியோவில் வெளிநாட்டவர் ஒருவர் பேசியுள்ளார். பி.டி.ஆருக்கு நிதிச் சந்தை குறித்த அறிவு சராசரிக்கும் கீழ், அதனால் அவரை பணி விலக கேட்டுக்கொண்டனர் என கூறியுள்ளார். தற்போது வீடியோ வடிவில் ஒரு சர்ச்சை கிளம்பியிருக்கிறது.
Raman_1990_US என்ற ஐடியில் அந்த வீடியோ பதிவேற்றப்பட்டுள்ளது. பி.டி.ஆருடன் பணியாற்றிய ஊழியர் பேசுகிறார் என்ற தலைப்பில் பகிரப்பட்டுள்ள அவ்வீடியோவில், ஒருவர் "ஹலோ நண்பர்களே, நான் இந்த பி.டி.ஆர் ராஜனுடன் ஸ்டாண்டர்ட் சார்ட்டட்டில் பணியாற்றினேன். எப்.எம்., சேல்சில் தலைமைப் பொறுப்பில் இருந்தார். நிதிச் சந்தை குறித்த அவரது அறிவு சராசரிக்கும் கீழானது. அதனால் அவரது செயல்பாடு மோசம் என கூறி வங்கியிலிருந்து விலகச் சொன்னார்கள். அவரை நம்ப வேண்டாம்." இவ்வாறு பேசியுள்ளார்.
Input From: Dinamalar