Kathir News
Begin typing your search above and press return to search.

ஸ்டார்ட்அப் சூழலை வலுப்படுத்த மத்திய அரசு இவ்வளவு விஷயங்களை செய்கிறதா?

ஸ்டார்ட்அப் சூழலை வலுப்படுத்த மத்திய அரசு இவ்வளவு விஷயங்களை செய்கிறதா?
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  5 July 2023 7:31 AM

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், "ஸ்டார்ட்-அப் அறிவுசார் சொத்துரிமைப் பாதுகாப்பு" புதுமையான கண்டுபிடிப்புகளையும், தொழில்முனைவோரையும் ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதெனக் கூறினார். புதுதில்லியில் உள்ள தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் சிஎஸ்ஐஆர் ஏற்பாடு செய்த தேசிய அறிவுசார் சொத்துரிமை விழாவில் தொடக்க உரை ஆற்றிய அவர், "ஸ்டார்ட்அப்களின் காப்புரிமைகள் மற்றும் அறிவுசார் சொத்துரிமைகளை பதிவு செய்வதை தொழில்துறையுடன் இணைப்பது நாட்டில் புதுமைகளையும், தொழில்முனைவோரையும் ஊக்குவிப்பதாக அமைந்துள்ளது எனக் குறிப்பிட்டார்.


ஸ்டார்ட்அப் சூழலை வலுப்படுத்தவும், அவற்றின் திறனை மேம்படுத்தவும் பிரதமர் நரேந்திர மோடி பல திட்டங்களைத் தொடங்கியு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். எடுத்துக்காட்டாக முத்ரா திட்டம் மூலம் ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை பிணையில்லாமல் கடன் வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.


புதுமையான கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்முனைவோர் என்ற அடிப்படையில் ஸ்டார்ட்-அப்களுக்கு மிகப்பெரிய அளவில் ஊக்கமளிக்கப்படுவதாக அமைச்சர் கூறினார். மேலும் கடந்த ஒன்பது ஆண்டுகளில், பிரதமர் மோடி அறிவியல் மற்றும் விஞ்ஞானிகளுக்கு மதிப்பளித்துள்ளார். அவரது சமீபத்திய அமெரிக்கப் பயணத்தின் போது கூட, அறிவியல் தொடர்பான பிரச்சனைகளே முக்கியப் பொருளாக விவாதிக்கப்பட்டது" என்றார்.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News