Kathir News
Begin typing your search above and press return to search.

திமுகவில் இருக்கும் பெண்களுக்கே பாதுகாப்பு இல்லை: மேடையில் புலம்பிய மகளிர் அணி தலைவி!

திமுகவில் இருக்கும் பெண்களுக்கே பாதுகாப்பு இல்லை: மேடையில் புலம்பிய மகளிர் அணி தலைவி!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  25 July 2023 2:42 AM GMT

தென்காசி மாவட்டம் தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பாக திமுக சார்பில் தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட மகளிர் அணி சார்பில் மணிப்பூர் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மணிப்பூரில் நடந்த சம்பவத்திற்கும் அதுபோக மத்திய அரசுக்கு எதிராகவும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பெண்கள், தங்களுக்கு திமுக கட்சியினரால் அநீதி இழைக்கப்பட்டதாக வெளிப்படையாகக் குற்றச்சாட்டை தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது.

ஆர்ப்பாட்டத்தில் தென்காசி மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர் தமிழ்ச்செல்வி கட்சியில் இருக்கும் பெண்களுக்கு மரியாதை கொடுப்பதில்லை, இந்த நிலையில் மணிப்பூர் பெண்களுக்கு நியாயம் கேட்டு நாம் போராடுவதில் என்ன நியாயம் இருக்கிறது என்று பேசினார்.

உடனடியாக அவரிடம் இருந்த மைக்கை மாவட்டச் செயலாளர் சிவ பத்மநாபன் பறித்ததால் சர்ச்சை ஏற்பட்டது.

சில மாதங்களுக்கு முன் மாவட்டச் செயலாளரின் உதவியாளர் ஒருவர் பெண் நிர்வாகி ஒருவரிடம் போனில் தவறாகப் பேசியிருக்கிறார். ஆனால், நிர்வாகியை மாவட்டச் செயலாளர் சிவ பத்மநாபன் தற்போதுவரை பாதுகாத்து உடன் வைத்திருப்பதால், தமிழ்ச்செல்வி போஸ் உள்ளிட்ட மகளிர் அணியினர் பலரும் கொதிப்படைந்திருக்கின்றனர்.



Next Story
கதிர் தொகுப்பு
Trending News