Begin typing your search above and press return to search.
கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் இஸ்லாமிய சகோதரிகளை தாக்கிய தி.மு.க-வினர் - அதிகாரம் கையில் இல்லாமலே அராஜகம்!
By : Muruganandham
கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் சிவ சேனாதிபதியை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் நடந்து கொண்டிருக்கின்ற வேளையில், அங்கு வந்த இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் மீது கொடூர தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தொண்டாமுத்தூர் கரும்புக்கடை பகுதியில், அதிமுக கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த இஸ்லாமிய சகோதர சகோதரிகளை தாக்கிய சம்பவம் குறித்து அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக காவல்துறை துரித நடவடிக்கை எடுத்து அப்பகுதியில் எவ்வித வன்முறை சம்பவங்கள் நிகழாமல் தடுத்து நிறுத்தினர்.
இந்த தாக்குதலில் ஐந்து பெண்கள், இரு ஆண்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விரைந்து செயல்பட்ட தேர்தல் ஆணையம் மற்றும் காவல்துறையினருக்கு அதிமுக சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
Next Story