Kathir News
Begin typing your search above and press return to search.

ஜப்பானுடன் இணைந்து சந்திராயன்-4 திட்டம்.. இஸ்ரோ விஞ்ஞானிகளின் புது முயற்சி..

ஜப்பானுடன் இணைந்து சந்திராயன்-4 திட்டம்.. இஸ்ரோ விஞ்ஞானிகளின் புது முயற்சி..

Bharathi LathaBy : Bharathi Latha

  |  11 Nov 2023 3:26 AM GMT

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திராயன் 3 திட்டம் இந்தியாவின் சார்பில் வெற்றியடைந்து இருக்கிறது. இலலின் அடுத்த நிலவை நோக்கிய சந்திராயன் 4 திட்டத்தை இந்தியா ஜப்பான் உடன் இணைந்து செயல்படுத்த இருக்கிறது. இதில் நிலவு துருவ ஆய்வுப் பணிகள் என்று அழைக்கப்படும் இந்தத் திட்டத்தில் ரோபோட் எந்திரத்தை நிலவிற்கு அனுப்ப திட்டமிடப்பட்டு இருக்கிறது. ரோபோட் தன்னுடைய பணிகளை நிலவில் இருந்து செய்யும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. இந்த திட்டமே சந்திராயன் 4 எனும் பெயரில் விண்ணில் செலுத்தப்பட இருக்கிறது.


இந்தியாவும் ஜப்பானும் இணைந்து எந்திர ரோபோடிக் தொழில்நுட்ப ரோவர் மற்றும் லேன்டார் நிலவிற்கு அனுப்பும் திட்டம் தான் லூக்ஸ் இந்த திட்டத்திற்கு கடந்த 2017 ஆம் ஆண்டு இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, ஜப்பானின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஜாக்சா இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. சந்திராயன் 4 விண்கலம் நிலவின் தென் பகுதியில் நீர் மூலக்கூறுகள் இருப்பதை ஆதாரத்தையும் கண்டறிந்திருந்து திட்டத்திற்கு பிறகு சந்திராயன் 3 திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆனால் சந்திராயன் 2 திட்டத்தில் நீட்சியாக சந்திராயன் 3 இருந்தது.


சந்திராயன் 4 விண்கலம் நிலவின் மேற்பரப்பில் தரை இறங்கி அறிவியல் ஆய்வுகளை மேற்கொண்டது. இதற்கு அடுத்து இஸ்ரோவின் அடுத்த நிலவின் ஆராய்ச்சிக்காக அனுப்பும் ஒரு திட்டம்தான் சந்திராயன் 4 திட்டம். இதற்கான முன்னோட்டமாக இந்திய மற்றும் ஜப்பான் விஞ்ஞானிகள் பெங்களூருவில் உள்ள இஸ்ரோ தலைமையகத்தில் நேற்று முன்தினம் சந்தித்து ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டார்கள். முழுக்க, முழுக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் இந்த சட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News