Kathir News
Begin typing your search above and press return to search.

சிறுவனின் சமூக ஊடகப் பதிவு - இஸ்லாமியர்களால் வீடுகள் தீ வைத்து எரிப்பு!

சமூக ஊடக பதிவின் காரணமாக இஸ்லாமியர்களால் தாக்கப்பட்ட இந்து குடும்பங்களின் வீடுகள்.

சிறுவனின் சமூக ஊடகப் பதிவு - இஸ்லாமியர்களால் வீடுகள் தீ வைத்து எரிப்பு!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  18 July 2022 1:18 AM GMT

சமூக ஊடகப் பதிவின் சலசலப்புக்குப் பிறகு, இந்து வீடுகள், கோயில்கள் மீதான மற்றொரு தாக்குதலை வங்கதேசம் காண்கிறது. பங்களா தேஷின் நரைல் மாவட்டத்தில் இஸ்லாமியர்கள் என்று கூறப்படும் ஒரு கும்பல் ஒரு இந்து கோவிலைத் தாக்கியுள்ளது மற்றும் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த பல வீடுகளையும் சேதப்படுத்தியதாக காவல்துறை சனிக்கிழமை தெரிவித்துள்ளது. திகோலியா கிராமத்தில் வெள்ளிக்கிழமை மாலை இந்து சிறுவன் ஒருவரின் சமூக ஊடகப் பதிவால் வன்முறை ஏற்பட்டது.இந்து குடும்பத்தைச் சேர்ந்த வீடு ஒன்றும் தீ வைத்து எரிக்கப்பட்டது.


வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின்னர் வன்முறைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இஸ்லாமியர்களை கலைக்க போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரன் சந்திர பால் தெரிவித்தார். ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களை கோபப்படுத்தும் வகையில் இந்து சிறுவன் ஏதோ பதிவிட்டதாக பால் கூறினார். நிலைமையைக் கட்டுக்குள் வைத்திருக்க சட்ட அமலாக்கப் பிரிவினர் பணியாற்றி வருவதாக நரைல் காவல் கண்காணிப்பாளர் பிரபீர் குமார் ராய் தெரிவித்தார்.


"நாங்கள் சம்பவம் குறித்து விசாரித்து வருகிறோம். வன்முறைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது நிலைமை சாதாரணமாக உள்ளது" என்றார். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. முன்னதாக மார்ச் மாதம், தலைநகர் டாக்காவில் உள்ள ஒரு இந்து கோவிலுக்குள் ஒரு கும்பல் நுழைந்து சிலைகளை அவமதித்து, கோவில் வளாகத்தை சேதப்படுத்தியது. ஹாஜி சைபுல்லா தலைமையிலான கும்பல் டாக்காவின் வாரியில் உள்ள இஸ்கான் கோவிலுக்குள் 'நாரா-இ-தக்பீர்' கோஷமிட்டு கோவிலுக்குள் இருந்தவர்களை தாக்கியது. அந்த கும்பலில் 200க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Input & Image courtesy: News 18

Next Story
கதிர் தொகுப்பு
Trending News