Kathir News
Begin typing your search above and press return to search.

5 கட்சி தாவிய செந்தில் பாலாஜி சொன்னது உண்மைதான் - அண்ணாமலை பதிலடியால் ஆட்டம் கண்ட கரூர் அரசியல்!

5 கட்சி தாவிய செந்தில் பாலாஜி சொன்னது உண்மைதான் - அண்ணாமலை பதிலடியால் ஆட்டம் கண்ட கரூர் அரசியல்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  2 Jun 2022 10:43 AM GMT

கோவையில்செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை பத்திரிகையாளர்களை தரக்குறைவாக பேசியுள்ளார். பொய் சொல்வதற்காகவே பத்திரிகையாளர் சந்திப்பு நடத்துகிறார். அவருக்கு புரிதலும் கிடையாது, புரிந்துகொள்ளும் பக்குவமும் கிடையாது. அவரைப் பற்றி எழுதியும், பேசியும் பத்திரிகையாளர்கள் தங்கள் பக்கத்தையும் தொலைக்காட்சிகள் நேரத்தையும் வீணடிக்க வேண்டாம் எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், பதிலடி கொடுத்து பேசிய அண்ணாமலை, "5 கட்சி மாறியவர், காற்றில் இருந்து, நிலக்கரியில் இருந்து விஞ்ஞான முறையில் ஊழல் செய்பவர் செந்தில் பாலாஜி. அண்ணாமலைக்கு பக்குவம் இல்லை என்று சொல்லி இருக்கிறார்.

அவர் சொன்னதுபோல, எனக்கு பக்குவமாக ஊழல் செய்யத் தெரியாது. செந்தில் பாலாஜி கருத்தை முற்றிலுமாக ஏற்கிறேன். அண்ணாமலைக்கு பக்குவமாக ஊழல் செய்யத் தெரியாது. அண்ணாமலைக்கு ஊழல் செய்யவே தெரியாது" எனத் தெரிவித்துள்ளார்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News