Kathir News
Begin typing your search above and press return to search.

ராகுல் காந்தியின் தண்டனை உறுதி... சூரத் நீதிமன்ற தீர்ப்பு என்ன?

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் தண்டனையை சூரத் நீதிமன்றம் உறுதிப்படுத்தி உள்ளது.

ராகுல் காந்தியின் தண்டனை உறுதி... சூரத் நீதிமன்ற தீர்ப்பு என்ன?

Bharathi LathaBy : Bharathi Latha

  |  24 April 2023 2:45 AM GMT

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் வயநாடு MP ஆக இருந்தவர் ராகுல் காந்தி. இவர், கர்நாடக மாநிலம் கோலாரில் கடந்த 2019-ல் நடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் உரையாற்றும் போது, சர்ச்சையான கருத்தை கூறி பிரச்சனையில் மாட்டிக் கொண்டு இருந்தார். "எல்லா திருடர்களின் பெயர்களுக்கு பின்னால் மோடி பெயர் உள்ளதே அது எப்படி தெரியவில்லை என்று பிரதமர் மீது உள்ள காழ்ப்புணர்ச்சியின் காரணமாக அச்சமூகத்தை விமர்சனம் செய்து இருந்தார். இவரின், கருத்து ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் இடையே, குறிப்பாக மோடி இன்று சமூகத்தை சேர்ந்தவர்களிடையே பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தி இருந்தது.


இது தொடர்பாக குஜராத் பா.ஜ.க. எம்.எல்.ஏ. புர்னேஷ் மோடி சூரத் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றவியல் அவதூறு வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கின் உடைய தீர்ப்பு தான் தற்போது இந்தியாவில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் மார்ச் 23ம் தேதி அன்று ராகுல் காந்தியை குற்றம் செய்தவராக அறிவித்து அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது.


இதன் காரணமாக அவருடைய எம்பி பதவி பறிக்கப்பட்டது குறிப்பாக சிறை தண்டனை பெறும் நபர் எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய சட்டத்தில் இடம் இருப்பதாகவும் கூறப்பட்டது. இப்படிப்பட்ட சூழலில், தனது தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல் முறையீடு செய்தார். மேல்முறையீட்டு மனுவை விசாரணை செய்த நீதிமன்றம் ராகுல் காந்தியின் தண்டனையை உறுதி செய்து இருப்பதாக தீர்ப்பளித்து இருந்தது. இது காங்கிரஸ் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Input & Image courtesy: Mediyaan News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News