Kathir News
Begin typing your search above and press return to search.

உலகம் முழுக்க வைரல் ! தங்க முலாம் பூசப்பட்ட வடா பாவ் துபாயில் அறிமுகம் !

தற்போது உலகிலேயே முதல் முறையாக தங்க வடா பாவ் துபாயில் இருக்கும் உணவகத்தில் அறிமுகம் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது.

உலகம் முழுக்க வைரல் !  தங்க முலாம் பூசப்பட்ட வடா பாவ் துபாயில் அறிமுகம் !

Bharathi LathaBy : Bharathi Latha

  |  14 Sep 2021 2:15 PM GMT

இந்தியாவில் வட மாநிலங்களில் மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடும் ஸ்னாக்ஸ் வகைகள் கிடைக்கும். அவற்றில் பல தற்போது தென் மாநிலங்களில் பிரபலமடைந்து வருகிறது. அதில் ஒன்று தான் வட பாவ். இந்த வடா பாவ் மும்பையில் பிரபலமானது. குறிப்பாக ரோட்டோரம் இருக்கும் கடைகளில் மூலம் இது மிகவும் பிரபலமானது. இந்நிலையில் உலகத்தில் முதன் முறையாக 22 கேரட் தங்க முலாம் மூசப்பட்ட வட பாவ் துபாயில் உருவாக்கப்பட்டுள்ளது.


வெண்ணெய் மற்றும் பாலாடைக்கட்டி சேர்க்கப்பட்ட அந்த வடா 22 கேரட் தங்கத்தால் செய்யப்பட்ட காகிதத்தால் மூடப்படுகிறது. மேலும் இதில் இனிப்பு உருளைக்கிழங்கு, புதினா மற்றும் எலுமிச்சம்பழம் சேர்க்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக இதில் சேர்க்கப்படும் வெண்ணெய் பிரான்சிலிருந்து வந்துள்ளது என்பது அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கி உள்ளது. இந்த 22 கேரட் தங்க காகிதம் பிரான்சில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளது. இந்த வடா பாவ் விலை ரூ. 2,000 ஆகும். மேலும் இது தொடர்பான வீடியோ போச்சு தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.




மஸ்ரத் தாவூத் என்பவர் இந்த வீடியோவை ட்விட்டரில் ஷேர் செய்திருந்தார். ஏற்கனவே இதற்கு முன்னர் கூட, துபாயின் ஸ்கூபி கபே எனும் ஓட்டலில் 'பிளாக் டைமண்ட்' என அழைக்கப்படும் வெண்ணிலா ஐஸ்கிரீம் விற்பனை செய்யப்படுகிறது. இதன் ஒரு ஸ்கூப் விலை ரூ. 60,000 ஆகும். மேலும் அதில் வெர்சேஸ் கிண்ணத்தில் இந்த ஐஸ்கிரீம் பரிமாறப்படுகிறது. இதுதான் உலகின் மிக விலையுயர்ந்த ஐஸ்கிரீம் என்றும் அழைக்கப்படுகிறது. எனவே ஐஸ் கிரீமில் இருந்து வடா பாவ் வரை அனைத்தும் தங்கம் சேர்க்கப்பட்டு செய்யப்படுகின்றது. இப்படியே போனால் வருங்காலத்தில் தங்கம் அணிகலன் அல்லாமல் உள்ள உணவுப் பொருள் ஆகிவிடும் என்ற நிலைமை வரலாம்.

Input & image courtesy:News18


Next Story
கதிர் தொகுப்பு
Trending News