Kathir News
Begin typing your search above and press return to search.

சுவர் கட்டியதற்கு 5% கமிசன்- காண்ட்ராக்டரை மிரட்டும் தி.மு.க ஊராட்சி துணை தலைவர், வைரலாகும் வீடியோ!

சுவர் கட்டியதற்கு 5% கமிசன்- காண்ட்ராக்டரை மிரட்டும் தி.மு.க ஊராட்சி துணை தலைவர், வைரலாகும் வீடியோ!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  23 Jun 2022 11:32 AM GMT

குன்னூர் ஊராட்சி ஒன்றியத்தில் மேலூர் ஊராட்சி மன்ற தலைவியாக அ. தி. மு. க. வை சேர்ந்த ரேணுகாதேவி உள்ளார். இந்த ஊராட்சியின் துணைத்தலைவராகத் தி. மு. க. வை சேர்ந்த நாகராஜ் இருந்து வருகிறார்.

தன்னை பணி செய்ய விடாமல் தடுத்ததாகத் துணைத்தலைவர் மீது குற்றச்சாட்டு கூறி ரேணுகாதேவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. துணைத்தலைவர் மீது வழக்கு இந்த சம்பவம் குறித்து கொலக்கொம்பை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார், ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் ஊராட்சி மன்ற தலைவி ரேணுகாதேவியிடம் விசாரணை நடத்தினார்.

அப்போது அவர், துணைத்தலைவர் நாகராஜ் தன்னை பணி செய்ய விடாமல் தடுத்ததாகப் போலீசாரிடம் தெரிவித்தார். மேலும் இதுதொடர்பாக அலுவலக ஊழியர்கள், உறவினர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே இது தொடர்பான புகாரின்பேரில், மேலூர் ஊராட்சி துணைத்தலைவர் நாகராஜ் மீது பெண்ணை தகாத வார்த்தையால் திட்டுவது உள்பட 2 பிரிவுகளின் கீழ் கொலக்கொம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குன்னூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சந்திரசேகர், அதிகாரிகள் மற்றும் போலீசார் மேலூர் ஊராட்சி அலுவலகத்திலும் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் காம்ப்பவுன்ட் சுவர் கட்டியதற்கு ஊராட்சி தர வேண்டிய பணத்திற்கு 5% கமிசன் கேட்டு மிரட்டுகிறார் திமுகவை சேர்ந்த துணை தலைவர் நாகராஜ். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News