Kathir News
Begin typing your search above and press return to search.

'நீ போலீஸ்'னா நான் ஆளுங்கட்சி' - போலீஸ்காரரை வெளுத்த தி.மு.க பேரூராட்சி தலைவர்!

போலீஸ்காரரை தாக்க இயற்ற தி.மு.க பேரூராட்சித் தலைவர் சமுதாயத்திற்கு தவறான உதாரணம்.

நீ போலீஸ்னா நான் ஆளுங்கட்சி - போலீஸ்காரரை வெளுத்த தி.மு.க பேரூராட்சி தலைவர்!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  17 Nov 2022 6:55 AM GMT

கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் தி.மு.க பேரூராட்சி தலைவர் தான் விஷ்வ பிரகாஷ். இவர் பெரியநாயக்கன்பாளையம் தொகுதிக்குட்பட்ட கஸ்தூரி பாளையத்தில் பா.ஜ.க மற்றும் விஷ்வ இந்து பரிஷத் ஆகியோரின் கொடிகள் கட்டப்பட்டு இருந்தது. இவற்றை அகற்றும் முறை முயற்சியில் தி.மு.க பேரூராட்சி தலைவர் தலைவர் மற்றும் அவரது கொள்ளுமினர் களம் இறங்கி இருக்கிறார்கள். மேலும் இந்த நிகழ்ச்சியை தடுக்க வந்தவரை கொலை மிரட்டல் விடுத்தும் இவர் மிரட்டி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.


இதன் காரணமாக ஆளும் கட்சியினரின் அட்டூழியங்கள் மற்றும் கொடிகளை அகற்றும் முயற்சி கொலை மிரட்டல் ஆகியவற்றின் காரணமாக இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து இருக்கிறார்கள். அப்பொழுது சம்பவ இடத்திற்கு போலீசாருடன் சென்றனர். இந்த வழக்குகளில் இருந்து பேரூராட்சித் தலைவர் முன் ஜாமின் பெற்று வெளியே இருக்கிறார்.


கஸ்தூரி பாளையத்தில் உள்ள பா.ஜ க மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் ஆகிய கொடிகளை அகற்றும் முயற்சியின் போது போலீஸ்காரர் ஒருவர் தன்னுடைய செல்போன் மூலம் வீடியோ எடுக்க முயற்சி செய்து இருக்கிறார். ஆனால் அவரை தாக்கி இருக்கிறார். இந்த ஒரு நிகழ்ச்சிக்காக கோவை வடக்கு மாவட்ட பா.ஜ.க தலைவர் சங்கீதா கூறுகையில், ஆளும் கட்சியினர் போலீஸ்காரர்களை இப்படி தாக்குவது சமுதாயத்திற்கு மற்றும் மக்களுக்கு தவறான உதாரணமாக இருக்கிறது. தவறு செய்பவர்களை தண்டிக்க வேண்டிய இடத்தில் உள்ளவர்களை ஆளும் கட்சியினர் இப்படி தாக்குவது கண்டிக்கப்பட வேண்டியது. உடனடியாக அவரை கைது செய்ய வேண்டும் இல்லையெனில் நாங்கள் போராட்டம் நடத்துவோம் என்று கூறி இருக்கிறார்.

Input & Image courtesy: Dinamalar News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News