Kathir News
Begin typing your search above and press return to search.

தேசிய கொடியை தலைகீழாக ஏற்றிய கும்பகோணம் காங்கிரஸ் மேயர் - காங்கிரஸ் இப்படி போச்சே என தலையில் அடித்துக்கொள்ளும் மக்கள்!

கும்பகோணம் மாநகராட்சியில் தேசிய கொடியை தலைகீழாக ஏற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வீடியோவாக வெளியானது.

தேசிய கொடியை தலைகீழாக ஏற்றிய கும்பகோணம் காங்கிரஸ் மேயர் - காங்கிரஸ் இப்படி போச்சே என தலையில் அடித்துக்கொள்ளும் மக்கள்!

KarthigaBy : Karthiga

  |  16 Aug 2022 5:45 AM GMT

கும்பகோணம் மாநகராட்சியில் தேசிய கொடியை தலைகீழாக மேயர் சரவணன் ஏற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நாடு முழுவதும் நேற்று 75வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு வீடுகளில் கடைகளில் அனைவரும் தேசிய கொடி ஏற்றி வைத்து கொண்டாடினர்.


அதன் ஒரு பகுதியாக நேற்று கும்பகோணம் நகராட்சி அலுவலகத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் மாநகர மேயர் சரவணன் கலந்து கொண்ட தேசிய கொடி ஏற்றினார். அப்போது தேசியக்கொடி தலைகீழாக பறந்தது.

இதனை பார்த்த துணைமேயர் சு.ப தமிழழகன் உள்ளிட்ட கட்சியினர், அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர. பின்னர் உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள் தலைகீழாக ஏற்றப்பட்ட கொடியை கீழே இறக்கி சரி செய்தனர். பின்னர் சரவணன் மீண்டும் சரியாக கொடியை ஏற்றினார்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


தேசிய கொடியை தலைகீழாக ஏற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News