Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனா 3வது அலை: சமூக வலைத்தளங்களில் பிரபலமான டோலோ 650!

கொரோனா 3வது அலை காரணமாக சமூக வலைதளங்களில் தற்போது டோலோ 650 மாத்திரை மிகவும் பிரபலமடைந்து வருகிறது.

கொரோனா 3வது அலை: சமூக வலைத்தளங்களில் பிரபலமான டோலோ 650!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  27 Jan 2022 1:41 PM GMT

பராசிட்டமால் என்பது காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க மிகவும் பொதுவான மருந்து. நிபுணர்களின் வரையறையின்படி, டோலோ 650 என்பது வலிக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான வலி நிவாரணி ஆகும். அதிக வெப்பநிலையைக் குறைக்கவும் இதைப் பயன்படுத்தலாம். எனவே பொதுவாகவே கொரோனா தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து பாராசிட்டமாலின் பயன்பாடு கடுமையாக அதிகரித்தது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் உடல் வெப்பநிலையைக் குறைக்க முன்பு எப்போதும் போல பாராசிட்டமால் மாத்திரைகளை எடுத்துக் கொண்டனர்.


எனவே அனைத்து மக்களும் இதை அதிக அளவில் எடுத்துக் கொண்டதன் காரணமாக இதன் விற்பனை முன்பு இல்லாத வகையில் தற்போது பலமடங்கு உயர்ந்து உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மக்கள் இவற்றை கிலோ கணக்காக வாங்குவதாகவும் சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் வைரலாகி வருகிறது. இந்த நோய் தொற்று காலம் மக்களிடையே பொதுவான சில வார்த்தைகளாக சிலவற்றை மாற்றி உள்ளது. குறிப்பாக, ஆக்சிமீட்டர்', N95 போன்றவை. ஆனால் இப்போது பலர் காய்ச்சல் மற்றும் உடல் வலியிலிருந்து மீண்டு வருவதால், மிகவும் பிரபலமான பாராசிட்டமால் மாத்திரை வீட்டின் ஒரு பொதுப் பெயராக மாறுகிறது.


இந்த மருந்தின் தேவை மற்றும் எதிர்பாராத பிரபலத்தால் வியப்படைந்த டோலோ 650 ஐ தயாரிக்கும் மைக்ரோ லேப்ஸின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் இதுபற்றி கூறுகையில், "சமீபத்திய காலங்களில் டோலோ 650 பெற்ற இந்த அளவிலான பிரபலத்தை நிறுவனம் எதிர்பார்க்கவில்லை" என்றார். உண்மை என்னவென்றால், பல ஆண்டுகளாக இந்தியாவில் பரிந்துரைக்கப்படும் பாராசிட்டமால் 650 பிராண்டில் டோலோ-650 முதலிடத்தில் உள்ளது. இந்த நோய் தொற்று இந்த மருந்தின் தாக்கத்தில் மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது என்று தான் கூற வேண்டும்.

Input & Image courtesy: Times of India


Next Story
கதிர் தொகுப்பு
Trending News