Kathir News
Begin typing your search above and press return to search.

போலீசார் முன்னிலையில் மீன்வளத்துறை துறை அதிகாரியை மிரட்டும் தி.மு.க பிரமுகர்

மீன்வளத்துறை அதிகாரியை மிரட்டிய தி.மு.க பிரமுகர்.

போலீசார் முன்னிலையில் மீன்வளத்துறை துறை அதிகாரியை மிரட்டும் தி.மு.க பிரமுகர்

Bharathi LathaBy : Bharathi Latha

  |  30 Sep 2022 3:49 AM GMT

நெல்லை மாவட்டம் திசையன் வினை அருகே உள்ள உவரியில் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையில் பயன்படுத்தி மீன்களை பிடித்ததாக மீன்வளத்துறை இயர் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதன் பெயரில் மீன்வளத் துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திருக்க விரைந்து சென்றார்கள். உத்தரவின் பெயரில் தாராபுரம் மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆய்வாளர் உத்திராண்டு ராமன், உபரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார்கள்.


அங்கு அப்பொழுது சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்களை பிடித்ததாக தெரியவந்தது. அவ்வாறு பிடிபட்ட மீன்களை இராமன் பறிமுதல் செய்யும் முயன்று உள்ளார். அந்த சமயத்தில் அங்கு உவரி மீனவர் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவரும் தி.மு.க பிரமுகருமான அந்தோணி ராய் என்பவர் வந்தார். அவர் மீன்வளத்துறை அதிகாரிகள் உத்திராண்டு இடம் தகராறு செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.


மேலும் அவரை பணி செய்து விடாமல் தகாத வார்த்தைகளில் திட்டி, கொலை மிரட்டல் விடுவதாகவும் கூறப்படுகிறது. மீன்வளத்துறை அதிகாரி கொடுத்த புகாரின் பெயரில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது இன்ஸ்பெக்டர் பிரேமா அந்தோணி வலை வீசி தேடிவருகிறார். இதற்கிடையில் மீன்வளத்துறை அதிகாரிகளை அந்தோணியாராய் மிரட்டி வாக்குமூலத்தில் ஈடுபடும் வீடியோ காட்சிகள் தற்போது வாட்ஸ் அப்பில் பரவி பரபரப்பை ஏற்படப்பு உள்ளன. திசையில் வினை அருகே மின்வளத்துறை அதிகாரியை திமுக மிரட்டிய இந்த ஒரு வீடியோ சமூக வலைதளங்களிலும் அதிகமாக பரவப்படுகிறது.

Input & Image courtesy:Maalaimalar News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News