Kathir News
Begin typing your search above and press return to search.

கிரிப்டோ கரன்சியில் பணத்தை இழந்த விபரீதம் - கத்தி முனையில் மாணவர்கள் கடத்தல்!

கிரிப்டோ கரன்சியில் பணத்தை இழந்ததால் ஆத்திரம் வரைந்து கல்லூரி மாணவர்கள் கத்தி முனையில் கடத்தப் பட்டுள்ளார்கள்.

கிரிப்டோ கரன்சியில் பணத்தை இழந்த விபரீதம் - கத்தி முனையில் மாணவர்கள் கடத்தல்!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  24 Sep 2022 2:32 AM GMT

மதுரை கோரிப்பாளையம் ஓட்டல் கல்லூரி மாணவர்கள் ஒருவரை ஐந்து பேர் கொண்ட கும்பல் கத்தி முனையில் கிடைத்து சென்றதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே அவர்களை பிடிக்கும் மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில் குமார் உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து வடக்கு துணை கமிஷனர் ஜெகன் மோகன்ராஜ் பார்வையில் தல்லாகுளம் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தனிப்படை அனுப்பப்பட்டது. அவர்கள் சம்பவம் நடைபெற்ற ஹோட்டல் பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களுக்கு பற்றி ஆய்வு செய்தார்கள்.


அதில் கல்லூரி மாணவர்களை மர்மக்கும்பல் ஆட்டோவில் கடத்தி சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தன. இதன் அடிப்படையில் அந்த கும்பலில் அவர்கள் தேடி சென்றுள்ளார்கள். இது பற்றி மாணவர் கூறுகையில், நான் கோவை கல்லூரியில் படித்த பொழுது கிரிப்டோ கரன்சி வணிகம் பற்றி எனக்கு தெரியவந்தது. இதில் 40 ஆயிரம் முதலீடு செய்தால் வாரந்தோறும் 2000 வட்டி கிடைக்கும் என்று கூறப்பட்டிருந்தது. எனவே நான் இது தொடர்பாக சக நண்பர்கள் சிலரிடம் இது பற்றி கூறினேன்.


அதன் பிறகு நானும் மட்டும் சில நண்பர்களும் முதலீடு செய்தும், பின்னர் நான் மதுரைக்கு உள்ள கல்லூரியில் சேர்ந்து படித்து வருகிறேன். இதற்கிடையில் கிரிப்டோ கரன்சி நிறுவனம் மூடப்பட்டதாக எனக்கு தகவல் வந்தது. அதனை தொடர்ந்து கோவையில் என்னுடன் படித்த நண்பர்கள் சிலர், நீ சொன்னதால்தான் கிரிப்டோகரன் முதலீடு செய்தோம். எனவே நாங்கள் முதலீடு செய்த பதினாறு லட்சத்தை நீ தான் கொடுக்க வேண்டும் என்று நெருக்கடி கொடுத்தார்கள். அதனால் தான் என்னை கடத்தி சென்று செல்போன்களைப் பறித்து படத்தை கேட்டு மிரட்டினார்கள் என்று கூறினார். எனவே கத்தி முனையில் திடீரென்று மாணவர் கடத்தப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News