Kathir News
Begin typing your search above and press return to search.

ஜார்கண்ட் மாணவியின் கடைசி வார்த்தைகள் - என்ன கூறினார்?

ஜார்கண்ட் மாணவி அங்கீதா கடைசி வார்த்தைகள், "என் இறப்பிற்கு காரணமாக இருந்த அவனும் சாகவேண்டும்" என்று கூறி இருக்கிறார்.

ஜார்கண்ட் மாணவியின் கடைசி வார்த்தைகள் - என்ன கூறினார்?

Bharathi LathaBy : Bharathi Latha

  |  1 Sep 2022 1:24 PM GMT

இந்தியாவில் ஜாக்கெட் மாநிலத்தில் ராஞ்சி நகரை சேர்ந்தவர் தான் அங்கீதா. இவர் அதே பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார் . இவருடைய பக்கத்து வீட்டுக்காரரான ஷாருக் கான் என்பவர் இவரை ஒரு தலைப்பட்சமாக காலதலித்து வந்துள்ளார். அதை மாணவியிடம் தெரிவித்தும் மாணவி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார் இது பற்றி தன்னுடைய தந்தையிடமும் இவர் ஏற்கனவே கூறியிருக்கிறார். தினமும் பள்ளிக்கு செல்லும் வழியில் தன்னைப் பின் தொடர்ந்து இவர் காதல் டார்ச்சர் செய்துள்ளார்.


மாணவி தன்னுடைய காதலுக்கு மறுப்பு தெரிவித்ததன் காரணமாக சாருக் காணும் அவருடைய நண்பருமான சோட்டுக்கான், இருவரும் கூட்ட சேர்ந்து மாணவியின் வீட்டிற்கு இரவு நேரத்தில் பெட்ரோல் கேனுடன் சென்றுள்ளார்கள். மாணவி தூங்கிக் கொண்டிருந்த ஜன்னல் அருகே சென்று மாணவியின் உடன் மீது பெட்ரோலை ஊற்றி இருவரும் சேர்ந்து பற்ற வைத்துள்ளார்கள். இதனால் தன் மீது நெருப்பு பற்றி கொண்டதை அறிந்த மாணவி கதறி அழுதிருக்கிறார்.


90% தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்க பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் ராஞ்சியில் உள்ள ராஜேந்திர மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இறப்பதற்கு ஒரு நாள் முன்பு அவர் தன்னுடைய வாக்கு மூலத்தை போலீசாரிடம் பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறுகையில், "நான் இப்படி ஆவதற்கு காரணமாக இருந்த ஷாருக்கானும் சாக வேண்டும். என் நிலைமைக்கு அவன் தான் காரணம் அவன் நிச்சயம் தண்டனை பெற வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.

Input & Image courtesy: Vikatan

Next Story
கதிர் தொகுப்பு
Trending News