Kathir News
Begin typing your search above and press return to search.

கிறிஸ்துவத்திற்கு மதமாற்றுவதாக கிடைத்த தகவல்.. இந்து முன்னணியினர் எடுத்த அதிரடி..

கிறிஸ்துவத்திற்கு மதமாற்றுவதாக கிடைத்த தகவல்.. இந்து முன்னணியினர் எடுத்த அதிரடி..

Bharathi LathaBy : Bharathi Latha

  |  2 Dec 2023 11:27 AM GMT

மதமாற்றம் என்பது தற்போது பெரிய அளவில் நிகழ்ந்து வருகிறது குறிப்பாக வட மாநிலங்களில் அதிக அளவு இதுபற்றி நாம் செய்திகளை கேட்டு இருப்போம். ஆனால் தற்போது தமிழகத்திலும் தொடர்ச்சியான வண்ணம் மத மாற்றும் முயற்சிகள் நடந்து வருகிறது. குறிப்பாக ஏழை மக்களை குறிவைத்து மதமாற்றுவதற்கான கும்பலைகளை மிஷனரிகள் அனுப்புவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.



அந்த வகையில் தமிழகத்தில் திருப்பூர் மாவட்டத்தில் மதமாற்றுவதாக கிடைத்த தகவல்களின் பெயரில் இந்து முன்னணி அமைப்பினர் விரைவாக நடவடிக்கைகளை எடுத்து இருக்கிறார்கள். குறிப்பாக திருப்பூர் மாவட்டம் அருகே இருக்கும் ஒரு கிராமத்தில் மதமாற்றும் கும்பல் பல்வேறு வகையான கிறிஸ்துவ மதம் சார்ந்த புத்தகங்களுடன் கிராமத்தில் மதமாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக அவர்களுக்கு தகவல் கிடைத்தது. அதன் பெயரில் அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்து இருக்கிறார்கள்.


இது பற்றி அவர்கள் தன்னுடைய பக்கத்தில் கூறும் பொழுது, "திருப்பூர் மாநகர் - பெருமாநல்லூர் ஒன்றியம், தட்டான் குட்டை அருகில் பசுமை நகர் பகுதியில் கிறிஸ்தவர்கள் மதமாற்றுவதாக தகவல் கிடைத்து, அங்கு சென்று மதமாற்ற கும்பலை மதம் மாற்ற விடாமல் தடுத்து நிறுத்தி, இந்துமுன்னணி பொறுப்பாளர்கள் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்".

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News