அண்ணாமலையின் அதிரடியால் பின்வாங்கிய ஆவின் - இனி எந்த வகையிலும் ஏமாற்ற முடியாது : புரோ ஹெல்த் மிக்ஸ் பிளான் கைவிரிப்பு!
By : Kathir Webdesk
தமிழக சுகாதாரத்துறை சார்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை வாயிலாக, கர்ப்பிணியருக்கு ஆவின் நெய், பேரீச்சம் பழம், புரோ ஹெல்த் மிக்ஸ் உள்ளிட்ட ஊட்டச்சத்து பெட்டகம் இலவசமாக வழங்கப்படுகிறது. இதை கொள்முதல் செய்வதற்கான, டெண்டர் சமீபத்தில் நடந்தது. இந்த நிலையில், கர்ப்பிணியர் பயன்படுத்தும் புரோ ஹெல்த் மிக்ஸ் தயாரிக்க முடியாது என, ஆவின் நிறுவனம் கைவிரித்துள்ளது.
தனியாரிடம் புரோ ஹெல்த் மிக்ஸ் எனும் ஊட்டச்சத்து பானம் வாங்கியதால், அரசுக்கு 77 கோடி ரூபாய் அளவிற்கு நஷ்டம் ஏற்பட்டதாக, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டினார். ஆவின் நிறுவனத்திடம் வாங்கி இருந்தால், அரசின் செலவு குறைந்திருக்கும் எனவும் அவர் கூறினார்.
ஊட்டச்சத்து பெட்டகத்தில் வழங்குவதற்கு புரோ ஹெல்த் மிக்ஸ் தயாரித்து வழங்குமாறு, ஆவின் நிறுவன அதிகாரிகளிடம் அமைச்சர் கேட்டுக் கொண்டார். தற்போது, புரோ ஹெல்த் மிக்ஸ் தயாரிக்க முடியாது என ஆவின் அதிகாரிகள் கைவிரித்து உள்ளனர்.
புரோ ஹெல்த் மிக்ஸில் மருத்துவ குணம் கொண்ட சில பொருட்களை சேர்க்க வேண்டியுள்ளதால், அதை தயாரிக்கும் திட்டத்தை, ஆவின் நிறுவனம் கைவிட்டுள்ளதாக சப்பை கட்டு கட்டப்படுகிறது. அரசியல்வாதிகள் சிலரின் அழுத்தம் காரணமாகவும், ஊட்டச்சத்து பெட்டக திட்ட பொருட்கள் கொள்முதல் பணி முடிந்ததாலும், இந்த முடிவை ஆவின் நிறுவனம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.