Kathir News
Begin typing your search above and press return to search.

கோவிலுக்கு மேல் மசூதியா? - கியான்வாபி பின்னணி என்ன?

கியான்வாபி மசூதியின் சர்ச்சைக்குரிய கட்டமைப்பு தொடர்பான கணக்கெடுப்புக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

கோவிலுக்கு மேல் மசூதியா? - கியான்வாபி பின்னணி என்ன?

Bharathi LathaBy : Bharathi Latha

  |  14 May 2022 1:44 AM GMT

வாரணாசியில் அமைந்துள்ள கியான் வாபி இல் உள்ள மசூதியில் கோவில் அமைப்பு இருப்பது போன்ற வீடியோ சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இதுகுறித்து விசாரணை நடத்த மனுதாரர் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுத்திருந்தார். எனவே வாரணசி உயர் நீதிமன்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட இந்த வழக்கில் தற்போது உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்த உத்தரவிட்டதன் பேரில் விசாரணை நடந்து வந்தது. ஆனால் சமீபத்தில் கட்டமைப்பு தொடர்பான கணக்கெடுப்புக்கு கடைபிடிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.


மேலும் இதற்கு எதிராக முஸ்லிம் தரப்பில் இருந்து பதில் மனுவைத் கொடுத்து இருந்தார்கள். எனவே மே 17 ஆம் தேதிக்குள் கட்டமைப்பில் வீடியோவை முழுவதுமாக முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இப்போது இந்திய உச்ச நீதிமன்றத்தில் கணக்கெடுப்புக்கு தடை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுதாரர் 2022 மே 13 வெள்ளிக்கிழமையன்று நீதிமன்றத்தில் வழக்கைக் குறிப்பிட்டார். அங்கு மனுதாரர் இந்த வழக்கை விரைவாக விசாரிக்கவும், தற்போதைய நிலையைப் பராமரிக்கவும் நீதிமன்றத்திற்கு உத்தரவிடுமாறு கோரினார்.


எனவே மேற்படி இரண்டு நேற்று நடைபெற்ற வாரணாசி சிவல் மன்றத்தில் இந்த வழக்கில் காசி விஸ்வநாதர் கோயில் உள்ள கட்டிட அமைப்பு மசூதியில் உள் உள்ள பகுதிகளில் இருப்பதையும் வீடியோ கிராக் செய்து மற்றும் ஆதாரங்களை சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பழங்காலத்தில் இருந்தே இந்த ஒரு இடம் மசூதியாக இருந்துவந்தது வழக்கறிஞர் சார்பில் வாதாடினார். ஆனால் பெஞ்ச் இந்த விஷயத்தை மேற்கொள்ளாமல் அதைச் செய்ய மறுத்துவிட்டது.

Input & Image courtesy:OpIndia News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News