Kathir News
Begin typing your search above and press return to search.

முன்பின் தெரியாத நபருக்கு உதவிய தாராள மனம் படைத்த குடும்பத்தின் வீடியோ!

தனக்கு முன்பின் தெரியாத நபரின் மகளின் உணவிற்காக ஒரு குடும்பமே உதவி இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்.

முன்பின் தெரியாத நபருக்கு உதவிய தாராள மனம் படைத்த குடும்பத்தின் வீடியோ!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  1 Jan 2022 1:04 PM GMT

எவ்வளவு கடுமையான நோய்தொற்று வந்தாலும், மக்கள் மனதில் இருக்கும் கருணை உள்ளம் இன்னும் இருக்கத்தான் செய்கின்றது. நம் தெரிந்தவர்களுக்கு உதவி செய்வது என்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால் முன்பின் பழக்கம் இல்லாத நபர்களுக்கு உதவ முன்வருவது மிகப் பெரிய விஷயம். அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோ அனைவர் கண்களிலும் கண்ணீரை வர வைக்கும் அளவிற்கு, ஒரு பாச கதையாக அமைந்துள்ளது. அப்படி என்ன வீடியோ தானே பார்க்கிறீர்கள்? வாங்க பாக்கலாம்.


அந்த வீடியோவில், தந்தை மற்றும் மகள் இருவரும் சூப்பர் மார்கெட்டிற்கு உணவு வாங்குவதற்காக வந்துள்ளார்கள். அந்த நபரின் மகள் ஒருவகையான மூளை நோயினால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாத அளவிற்கு உள்ளார். பிறகு அவர்கள் உணவை வாங்கும் பொழுது தான் தந்தைக்கு ஞாபகம் வருகிறது அவர் பணப்பையை வீட்டில் இறந்து விட்டார் என்று, பிறகு அங்கு பொருட்களை வாங்கிக் கொண்டிருக்கும் ஒரு குடும்பத்திடம் சென்று தன்னுடைய உணவிற்கு பணம் தரும்படி கேட்டுள்ளார். அவர்கள் சிறிதும் தயக்கமின்றி தாங்கள் பணம் தருவதாக ஒத்துக் கொண்டு உடனடியாக உணவை வாங்கிக் கொடுக்கிறார்கள்.



பிறகு அந்தத் தந்தையின் கண்களில் இருந்து கண்ணீர் வருகிறது. மேலும் அந்த குடும்பத்தினர் அந்தப் பெண்ணிற்கு கிறிஸ்துமஸ் பரிசாக சில பொருட்களையும் வாங்கிக் கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றார்கள். முன்பின் தெரியாத ஒருவருக்கு உதவி செய்யும் நல்ல உள்ளம் படைத்த இந்த குடும்பத்தின் வீடியோவை, சுமார் 6 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Input & Image courtesy: India Today




Next Story
கதிர் தொகுப்பு
Trending News