Kathir News
Begin typing your search above and press return to search.

தூய்மை இந்தியா இயக்கம் - 2.0: கழிவை செல்வமாக்கும் மத்திய அரசின் அட்டகாசமான திட்டம்!

கழிவுவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் நிலையங்களை உருவாக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம்.

தூய்மை இந்தியா இயக்கம் - 2.0: கழிவை செல்வமாக்கும் மத்திய அரசின் அட்டகாசமான திட்டம்!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  4 Feb 2023 3:23 AM GMT

10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட நகரங்களில் கழிவுவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் நிலையங்களை உருவாக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டார். அமிர்த காலத்தில் வழிநடத்தும் சப்தரிஷி என்னும் ஏழு முன்னுரிமைகளுடன், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2023-2024 பட்ஜெட்டை சமர்ப்பித்தார். 'பசுமை வளர்ச்சி' பிரிவில், சுழற்சிப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக, கோபர்தன் திட்டத்தின் கீழ், கழிவை செல்வமாக்கும் 500 புதிய ஆலைகள் நிறுவப்படவுள்ளன. இவற்றில் அழுத்தப்பட்ட உயிரி வாயு நிலையங்கள் 200 ஆகும்.


நகர்ப்புற பகுதிகளில் 75-ம், சமுதாய மற்றும் தொகுப்பு அடிப்படையிலான 300 ஆலைகளும் இதில் அடங்கும். இதற்கான மொத்த முதலீடு ரூ.10,000 கோடியாக இருக்கும். பசுமை வளர்ச்சி’ திட்டத்தின் ஒரு பகுதியாக, மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம், என்ஜீனியர்ஸ் இந்தியா நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது. 10 லட்சத்துக்கும் கூடுதலான மக்கள் தொகை கொண்ட நகரங்களில் கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்த இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வகை செய்யும். மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் செயலர் மனோஜ் ஜோஷி, என்ஜீனியர்ஸ் இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் திருமிகு வர்திகா சுக்லா முன்னிலையில், அமைச்சகத்தின் நகர்ப்புற தூய்மை இந்தியா இயக்கத்தின் திருமிகு ரூபா மிஸ்ரா, இஐஎல் நிர்வாக இயக்குனர் திரு ஆர் கே ரதி ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.


குப்பையில்லா நகரங்களை உருவாக்கும் தொலைநோக்குப் பார்வையுடன், நகர்ப்புற தூய்மை இந்தியா இயக்கம் - 2.0 வின் கீழ் நிலையான திடக்கழிவு மேலாண்மை மீதான கவனம் வலுப்படுத்தப் பட்டுள்ளது. இந்த நோக்கத்தில் கவனம் செலுத்தி, 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களில் பெரிய அளவிலான திடக்கழிவு செயலாக்க வசதிகளை அமைக்க மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இந்தப் பிரிவில், லக்னோ, கான்பூர், பரேலி, நாசிக், தானே, நாக்பூர், குவாலியர், சென்னை, மதுரை, கோயம்புத்தூர் போன்ற இந்தியாவில் 59 மில்லியன் நகரங்கள் உள்ளன.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News