Kathir News
Begin typing your search above and press return to search.

அரசுப் பணி ஆசை காட்டி மதம் மாற்றிய பாதிரியார்- திருச்சபை நிர்வாகத்திலும் ஊழல்.!

அரசுப் பணி ஆசை காட்டி மதம் மாற்றிய பாதிரியார்- திருச்சபை நிர்வாகத்திலும் ஊழல்.!

ShivaBy : Shiva

  |  10 Oct 2021 1:50 AM GMT

₹ 34 லட்சம் லஞ்சம் வாங்கிக் கொண்டு ஒரே இரவில் இந்து பெண்ணை கிறிஸ்தவராக மதம்‌மாற்றி அரசுப் பணியில் அமர வைத்த லுத்தரன் திருச்சபை பிஷப் மீது அச்பையைச் சேர்ந்தவர்கள் புகார் அளித்துள்ளனர். திருச்சபைக்கு ₹.15,000 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாகவும், அவற்றை பிஷப்பிடம் இருந்து காப்பாற்றிக் கொடுக்க வேண்டும் என்றும் முதல்வரிடம் மனு அளித்துள்ளனர்.

தமிழ் சுவிசேஷ லுத்தரன் சபை ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா மற்றும் தமிழ்நாடு என்று தென்னிந்தியா முழுவதும் செயல்படுகிறது. திருச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்த சபைக்கு தற்போது டேனியல் ஜெயராஜ் என்பவர் பிஷப்பாக உள்ளார்‌. இவர் கடந்த 2019ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட நிலையில், 2020ஆம் ஆண்டே அவரது பதவிக் காலம் முடிந்ததும், அதிகபட்ச வயதான 65 வயது ஆன போதும் பதவியை விட்டுக் கொடுக்காமல் ஊழலில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.

இவரது செயல்பாடு குறித்து திருச்சபை கவுன்சில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், கவுன்சிலைக் கலைத்து விட்டு வயது வரம்பை உயர்த்த திருச்சபை சட்டதிட்டங்களை திருத்த முற்பட்டுள்ளார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அது இன்னும் விசாரணையில் உள்ளது.

இந்நிலையில் தனது விசுவாசிகளை முக்கியமான பதவிகளில் அமர வைத்து பிஷப் டேனியல் தனது இஷ்டத்துக்கு செயல்படுவதாகவும் ஊழலில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர் ஹேமாவதி என்ற இந்து பெண்ணிடம் ₹34 லட்சம் லஞ்சமாக பெற்றுக் கொண்டு, அவரை ஒரே இரவில் கிறிஸ்தவராக மதம் மாற்றி தஞ்சாவூரில் உள்ள அரசு உதவி பெறும் கிறிஸ்தவ பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அரசு ஊதியம் பெறும் ஆசிரியராக நியமித்துள்ளார்.

இதே போன்று லஞ்சம் வாங்கிக் கொண்டு பலரை பணியமர்த்தி இருப்பதாகவும், இது வரை இந்த வகையில் ₹ 25 கோடி வரை அவர் லஞ்சமாகப் பெற்றிருக்கக் கூடும் என்றும் அவர் மீது குற்றம் சுமத்துபவர்கள் கூறுகிறார்கள். இவரைப் பற்றி கல்வித் துறை அதிகாரிகளுக்கும், முதன்மைக் கல்வி அலுவலருக்கும் புகார் அளித்த போதும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

கல்வித் துறை அதிகாரிகள் பிஷப்பிடம் ₹50,000 லஞ்சம் பெற்றுக் கொண்டு அவர் நியமனம் செய்யும் ஆட்களுக்கு அங்கீகாரம் வழங்குவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. லுத்தரன் திருச்சபை 200க்கும் மேற்பட்ட சர்ச்சுக்கள், பள்ளிகள், கல்வியில் கல்லூரி, கலை அறிவியல் கல்லூரி, காப்பகங்கள், அனாதை இல்லங்கள் என பல்வேறு நிறுவனங்களை‌ நடத்தி வருகிறது.

இந்த திருச்சபைக்கு சொந்தமான சொத்துக்கள் ₹15,000 கோடி மதிப்பிலானவை என்று கூறப்படுகிறது. எனவே திருச்சபைக்கு சொந்தமானவற்றை பிஷப் டேனியல் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுத்து சொத்துக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் அரசு உதவியுடன் செயல்படுகின்றன. இவற்றில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு அரசு ஊதியம் வழங்குகிறது. எனவே அரசுப் பணி வழங்குகிறேன் என்று ஆசை காட்டி லட்சலட்சமாக சம்பாதித்ததோடு பலரை மதமாற்றமும் செய்து வந்துள்ளார் பிஷப் டேனியல். கிறிஸ்தவ நிறுவனங்களில் கிறிஸ்தவர்களுக்கு தான் முன்னுரிமை என்பது தெரிந்த விஷயமாக இருந்தாலும், அரசுப் பணி என்று ஆசை காட்டி அதையும் கிறிஸ்தவர்கள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வது பலர் அறியாத உண்மை.

தமிழ் சுவிசேஷ லுத்தரன் சபை ஒரு FCRA NGO. கடந்த ஐந்து ஆண்டுகளில் ₹21 கோடிக்கும் மேல் வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெற்றுள்ளது. இந்த அமைப்பின் தலைமைச் செயற்பாட்டாளர் பிஷப் டேனியல் ஜெயராஜ் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Dinamalar Nellai

Image Courtesy: Facebook


Next Story
கதிர் தொகுப்பு
Trending News