Kathir News
Begin typing your search above and press return to search.

சிறப்பு கட்டுரை : தமிழகத்தில் பா.ஜ.க அலை

சிறப்பு கட்டுரை : தமிழகத்தில் பா.ஜ.க அலை

Tinku VenkateshBy : Tinku Venkatesh

  |  19 Feb 2022 10:26 AM GMT

அண்ணாமலையின் தலைமையில் பாரதிய ஜனதா கட்சி தமிழக மக்களின் மனதில் இடம்பிடிக்க துவங்கிவிட்டது. திராவிடக் கட்சிகளால் பரப்பப்படும் பொய்களுக்கும், பிரதமர் மோடிக்கு எதிராக உருவாக்கப்பட்ட போலி வெறுப்புக்கும் எதிராக வலுவான போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர் பா.ஜ.க-வினர்.

ஐ.பி.எஸ் அதிகாரியாக இருந்த அண்ணாமலையின் அறிவாற்றல் பல்வேறு தரப்பு மக்களைக் கவர்ந்து வருகிறது. ஊழலற்ற பிம்பத்துடன் கூடிய அவரது பேச்சு திறன் ஏராளமான இளைஞர்களை கட்சிக்கு ஈர்த்துள்ளது.

கொரோனா ஒழுங்குமுறை விதிமுறைகளை காரணம் காட்டி மாநில அரசால் மூடப்பட்ட கோவில்களை மீண்டும் திறப்பதில் அவரது வெற்றி தொடங்கியது. சென்னையில் பா.ஜ.க நடத்திய மிகப்பெரிய போராட்டத்திற்கு பிறகு, கோவில்களை திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பத்திரிக்கையாளர் சந்திப்புகளில் கட்சித் தலைவரின் எளிமையான அணுகுமுறையின் காரணமாகவே செய்தி ஊடகங்களில் தமிழக பா.ஜ.க இடம் பெறத் தொடங்கியுள்ளது. எல்லாப் பொய்ப் பிரச்சாரங்களையும் உண்மைகளைக் கொண்டு நடைமுறை ரீதியில் எதிர்கொள்கிறார் அண்ணாமலை.

பக்கச்சார்பான ஊடக நிறுவனங்கள், மற்றும் பத்திரிகையாளர்களால் உருவாக்கப்பட்டுள்ள பிம்பத்தை தடுக்க சமூக ஊடகப் பிரிவை வலுப்படுத்தியது கட்சிக்கு மிகவும் உதவியது. சமூக ஊடகங்களில் ஆளும் மாநில அரசுக்கு எதிரான உள்ளடக்கத்தை வெளியிட்டதற்காக பொய்யாகக் கட்டமைக்கப்பட்ட கட்சி சாராத நபரான ஷிபினுக்கு சட்டப்பூர்வமாக உதவியதில் கட்சி ஒரு படி மேலே சென்றது.

மாநிலம் முழுவதும் அமைதிப் போராட்டத்தின் பாதையைத் தேர்ந்தெடுத்து, லாவண்யாவின் மரணம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி மாண்புமிகு உயர் நீதிமன்றத்தை அணுகியது அண்ணாமலையின் தலைமைத்துவத்தை நிரூபித்துள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், தனியாக போட்டியிடும் கட்சியின் முடிவு, மக்களின் இதயங்களை வெல்வதற்காக ஒட்டுமொத்த மாநிலப் பிரிவையும் உற்சாகப்படுத்தியுள்ளது. மத்தியில் மோடி தலைமையிலான அரசின் எண்ணற்ற திட்டங்களையும், தமிழக மக்கள் பெறும் பலன்களையும் கட்சி உறுப்பினர்கள் வலுவாக வலியுறுத்தத் தொடங்கியுள்ளனர்.

மாநிலம் முழுவதும் கட்சி உறுப்பினர்களின் இடைவிடாத பிரச்சாரம், மக்களின் வரவேற்பை பெற்றுள்ளது. சுத்தமான அரசியல் தலைவர்களாக மாற விரும்பும் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வாய்ப்பு அளித்தது தமிழக அரசியல் வரலாற்றில் மைல்கல் ஆகும். வாக்குப் பங்கீட்டில் கணிசமான முன்னேற்றம் எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக பா.ஜ.க-வுக்கு இந்த தேர்தல் நிச்சயம் ஒரு முக்கியமான திருப்புமுனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News