Kathir News
Begin typing your search above and press return to search.

பேரணிக்கு அனுமதி தீர்ப்பு வந்த கையோடு ஆட்டத்தை துவங்கிய ஆர்.எஸ்.எஸ் - 'ஆப்ரேசன் தமிழ்நாடு' ஆரம்பம்

பேரணிக்கு அனுமதி தீர்ப்பு வந்த கையோடு ஆட்டத்தை  துவங்கிய ஆர்.எஸ்.எஸ் - ஆப்ரேசன் தமிழ்நாடு ஆரம்பம்

Mohan RajBy : Mohan Raj

  |  14 April 2023 1:18 PM GMT

இனி ஆட்டம் வேற மாதிரி இருக்கும் என ஆர்எஸ்எஸ் தரப்பு முடிவு செய்துள்ளது.

2022 அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தி அன்று 50 இடங்களில் தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் சார்பில் பேரணி நடத்த 2022 செப்டம்பர் 22ஆம் தேதி உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது உத்தரவையும் மீறி தமிழ்நாடு காவல்துறை அனுமதி மறுத்தது. அதனால் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இதன் விளைவாக ஆறு இடங்கள் தவிர 44 இடங்களில் பாதுகாப்போடு ஆர்எஸ்எஸ் பேரணி உள்அரங்கு கூட்டமாக நடத்துவதற்கு தனி நீதிபதி அமர்வில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இத்தனை கட்டுப்பாடுகளை ஏற்க மறுத்த ஆர்எஸ்எஸ் அமைப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு விசாரித்த இரு நீதிபதிகள் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு சுற்றுச்சூழுடன் கூடிய மைதானங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பினரின் அணிவகுப்பு போராட்டம் நடத்த வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தது.

ஆர் எஸ் எஸ் அணிவகுப்பு பேரணி அமைதியான முறையில் நடைபெறுவதற்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டது உயர் நீதிமன்றம். ஆனால் உயர்நீதிமன்றத்தில் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்தது. இந்த வழக்கு விசாரித்த ராமசுப்பிரமணியம் தலைமையிலான அமர்வில் தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞரான முகுல் ரோத்தகி, உளவுத்துறையின் தகவலின் அடிப்படையில் தான் இந்த விவகாரத்தில் முடிவெடுக்க முடியும் ஆனால் அதை எதையும் கவனிக்காமல் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பேரணிக்கு கட்டுப்பாடுகள் இல்லாத பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது ஏற்க முடியாது என்று வாதிட்டார்.

ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மகேஷ் ஜெத்மலானி, மத்திய அரசுக்கு எதிரான ஆளும் கட்சியின் கூட்டணியில் உள்ள கட்சிகளின் மனித சங்கிலி போராட்டத்திற்கு அனுமதி வழங்கிய தமிழக அரசு ஆர் எஸ் எஸ் பேரணிக்கு மட்டும் அனுமதி வழங்க மறுக்கிறது, மேலும் தமிழ்நாடு அரசு ஒரு தலைப்பட்சமாக நடந்து கொள்கிறது என்றும் வாதிட்டார். அதாவது உண்மையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை மத்திய அரசு தடை செய்ததால் எங்களது பேரணிக்கு தான் அச்சுறுத்தல் ஏற்படலாம், அதற்காக தமிழ்நாடு அரசு எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமே தவிர ஆர்எஸ்எஸ் பேரணியை தடுக்க கூடாது என்றும் வாதிட்டார்.

இந்த வாதத்திற்கு பிறகு தமிழக அரசு தரப்பில் இந்த வழக்கு பத்து நாளுக்கு பின் விசாரிக்க வேண்டும் அதற்குள் இந்த பேரணி தொடர்பான ஒரு விரிவான அறிக்கையை சிலிட்ட கவரில் தாக்கல் செய்கிறோம் என்று கூற, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து நீதிபதி ராமசுப்பிரமணியம் தலைமையிலான அமர்வு. பிறகு நேற்று தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அனுமதி வழங்கப்படுகிறது மேலும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிபதி ராமசுப்பிரமணியன் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு தீர்ப்பு வழங்கியது.

அதாவது ஆர் எஸ் எஸ் பேரணிக்கு எதிரான வழக்கில் அனைத்து மனுகளையும் தள்ளுபடி செய்வதாக ஒரே வார்த்தைகள் உச்சநீதிமன்ற தீர்ப்பளித்து உத்தரவிட்டது. இதன்படி இனி ஆர்எஸ்எஸ் பேரணி எந்தவித தடையும் இன்றி தமிழ்நாட்டில் நடைபெறும் என்பது உறுதியாகி உள்ளது. இதனை தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். தரப்பில் தமிழகத்தில் இனி வரும் காலங்களில் பேரணியை பெருமளவில் நடத்த வேண்டும் என திட்டமிடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இடதுசாரி இயக்கங்களின் வளர்ச்சியை தடுத்து நிறுத்தவும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் ஷாகாக்கள், கூட்டங்கள், நிர்வாகிகள், அமைப்பில் பணியாற்றும் முழு நேர ஊழியர்கள், அலுவலகங்கள், வாராந்திர கூட்டங்களின் எண்ணிக்கைகள் இவை அனைத்தையும் கிட்டத்தட்ட மூன்று மடங்காக அதிகரிக்க ஆர்.எஸ்.எஸ் அதிரடி திட்டம் தீட்டியுள்ளது. இதற்க்கு இன்னும் 6 மாத காலம் மட்டுமே கால அவகாசம் எடுத்துக்கொள்ளப்படுள்ளது என ஆர்.எஸ்.எஸ் தரப்பில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News