Kathir News
Begin typing your search above and press return to search.

அண்ணாநகர் ரெய்டு மூலம் உதயநிதிக்கு போடப்படும் ஸ்கெட்ச் - பின்னணி என்ன?

அண்ணாநகர் ரெய்டு மூலம் உதயநிதிக்கு போடப்படும் ஸ்கெட்ச் - பின்னணி என்ன?

Mohan RajBy : Mohan Raj

  |  26 April 2023 1:42 AM GMT

யார் இந்த திமுக எம்எல்ஏ மோகன்? குறிப்பாக இவர் வீட்டுக்கு வருமான வரித்துறையினர் ரைடு செல்வதற்கான காரணம் என்ன?

தமிழ் வருட பிறப்பின் ஆரம்பம் முதல் திமுகவிற்கு எதிராக பல குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது, தமிழ் வருட பிறப்பான ஏப்ரல் 14 அன்றே பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுகவினரின் சொத்து பட்டியலை பத்திரிகையாளர்கள் முன்பு வெளியிட்டார் அந்த சர்ச்சை முடிவதற்குள்ளையே அடுத்ததாக திமுக நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியது போன்ற ஆடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார் அண்ணாமலை. அந்த ஆடியோ பதிவில் முதலமைச்சரின் மகனான உதயநிதி மற்றும் மருமகன் சபரீசன் ஆகியோரின் ஊழல் பற்றியும் அதை எப்படி பாதுகாப்பது மாட்டிக்கொள்ளாமல் எப்படி தப்பிப்பது என்று பி டி ஆர் பேசியது இடம்பெற்று இருந்தது.

ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய போதிலும் தொடர்ந்து அமைதி காத்து வந்த பிடிஆர் ஆடியோ வெளியாகி கிட்டத்தட்ட நான்கு நாட்களுக்குப் பிறகு அந்த ஆடியோவில் உள்ள குரல் என்னுடையது இல்லை என்றும் வளர்ந்துள்ள தொழில்நுட்பத்தின் மூலம் போலியாக சித்தரிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். இதற்கு, அந்த ஆடியோவில் உள்ள கருத்துக்களைப் போன்று என்னுடைய குரலில் மாற்றி அமைத்து தாருங்கள் என்று அண்ணாமலை கேட்ட பிறகு தனது மறுப்பில் இருந்து பின்வாங்கி மறுபடியும் அமைதி நிலைக்கே சென்றுவிட்டார். இதனைத் தொடர்ந்து அண்ணாமலை தனது பாஜக மாநில தலைமை குழு மூலம் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜரின் ஆடியோ குறித்த விவகாரம் பற்றி ஆளுனரிடம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணி அளவில் உரிய தணிக்கை விசாரணையை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வந்தனர்.

இந்தக் கோரிக்கைக்கு உடனடியாக நடவடிக்கையும் எடுக்கப்பட்டது அதாவது பாஜக மாநில தலைமை குழு தனது கோரிக்கையை முன்வைத்து வந்த பிறகு அடுத்த நாள் அதிகாலை 5 மணிக்கே ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட இடங்களில் தமிழ்நாட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த நிறுவனம் அண்ணாமலை வெளியிட்ட திமுகவினரின் சொத்து பட்டியலில் இடம் பெற்றிருந்தது.இச்சம்பவத்தில் முக்கியமாக புகார் தெரிவிக்கப்பட்ட அடுத்த நாள் அதிகாலையிலேயே சென்னை அண்ணா நகரில் உள்ள திமுக எம்எல்ஏவான மோகன் வீட்டில் முதல் ரெய்டு இறங்கியது, வேறு எங்கும் ரெய்டு இறங்காமல் முதலில் இவர் வீட்டிற்கு ரைடு நடத்தியதன் காரணமும் பின்னணியும் என்ன?

திமுக சார்பாக அண்ணாநகரைச் சேர்ந்த எம்எல்ஏவாக இருப்பவர் எம் கே மோகன். இவர் அரசியலை தாண்டி செங்கல் வியாபாரம், கட்டுமான கற்கள் வியாபாரம், ரியல் எஸ்டேட் பணிகள் என்று பல்வேறு வியாபாரங்களை செய்து வருகிறார். எம் கே மோகன் கடந்த முறை தேர்தல் ஆணையத்தில் தனது மனுவை தாக்கல் செய்த பொழுதே தன்னிடம் 211 கோடி ரூபாய் சொத்து இருப்பதாகவும் இரண்டு கோடி ரூபாய் கடன் இருப்பதாகவும் அதிகாரப்பூர்வமான கணக்குகளை காட்டியுள்ளார். இவரது மகன் கார்த்திக் தற்போது ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் மேற்பார்வை பணிகளை செய்யும் நிர்வாகியாக உள்ளார். எம் கே மோகன் வீட்டும் அவரது மகன் கார்த்திக் வீட்டும் ரெய்டில் சிக்கியுள்ளது.

இச்சூழலில் மிகவும் கவனிக்க வேண்டிய தகவல் என்னவென்றால்? எம் கே மோகனின் மகனான அண்ணாநகர் கார்த்திக் தான் அமைச்சர் உதயநிதியின் நெருங்கிய நண்பர். தற்போது அண்ணா நகர் கார்த்தியின் ஆவணங்கள் சிக்கினால் உதயநிதியும் சிக்குவதற்கு அதிக வாய்ப்புள்ளது என்று வருமானவரி துறையினர் இவரது வீட்டை ரைடு செய்வதற்கு முதலில் தேர்வு செய்துள்ளனர் என தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும் இரண்டு நாட்களாக ரெய்டு தொடர்வதால் திமுகவினர் கலக்கத்தில் உள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News