அரசியலில் இல்லாவிட்டாலும் கருப்புச்சட்டை கும்பலை சுளுக்கெடுத்த சூப்பர் ஸ்டார்..! அர்த்தமாயிந்தா ராஜா...!
![அரசியலில் இல்லாவிட்டாலும் கருப்புச்சட்டை கும்பலை சுளுக்கெடுத்த சூப்பர் ஸ்டார்..! அர்த்தமாயிந்தா ராஜா...! அரசியலில் இல்லாவிட்டாலும் கருப்புச்சட்டை கும்பலை சுளுக்கெடுத்த சூப்பர் ஸ்டார்..! அர்த்தமாயிந்தா ராஜா...!](https://kathir.news/h-upload/2023/08/24/1534919-adobeexpress2023082410461901.webp)
கதறும் இடதுசாரிகள்...! கண்டுகொள்ளாமல் சனாதன தர்மத்தை போற்றும் சூப்பர் ஸ்டார்...!
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஆகவும் ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்ட ரஜினிகாந்த் தனது படம் ஒவ்வொன்றும் வெளியாவதற்கு முன்பாக ஆன்மீக பயணமாக இமயமலை சென்று வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
இருப்பினும் கொரோனா காலகட்டம் அதற்குப் பிறகு அவரது உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் தொடர்ந்து நான்காண்டுகளுக்கு சூப்பர் ஸ்டாரால் இமயமலை செல்ல முடியவில்லை, கடைசியாக 2019 ஆம் ஆண்டு அண்ணாத்த படம் வெளியாவதற்கு முன்பு அவர் இமயமலை சென்று வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நெல்சன் இயக்கத்தில் தற்போது வெளியான ஜெயிலர் படத்தின் வெளியிட்டிற்கு முன்பாக அவர் இமயமலை பயணம் சென்றார்.
எப்போதெல்லாம் இமயமலை செல்கிறாரோ அப்போதெல்லாம் தனக்கு மன அமைதியும் தன்னம்பிக்கையின் கிடைப்பதாக கூறியவர், அந்த ஆன்மீகம் பயணம் முழுவதும் சாதாரண மனிதர்களைப் போல உலா வருவதையே சூப்பர் ஸ்டார் எப்பொழுதும் விரும்புவாராம். இந்த நிலையில் இமாலய பயணத்தை முடித்த பிறகு ஜார்கண்ட் ஆளுநரான சி.பி. ராதா கிருஷ்ணனை சந்தித்து அவர்கள் குடும்பத்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதோடு ராஞ்சியில் உள்ள யோகதா சத்சங்க ஆசிரமத் தலைமையகத்திற்கு சென்றுள்ளார்.
இதற்கிடையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்த பொழுது சின்ன மஸ்தா தேவியை வழிபடுவது தனது நீண்ட நாள் கனவாகவும் இனிமேல் வருடா வருடம் இந்த கோவிலுக்கு வந்து வழிபடுவதாகவும் தெரிவித்துள்ளார். அங்கு இருக்கும் துறவிகளை சந்தித்த சூப்பர் ஸ்டார் உத்தரப்பிரதேசம் சென்று முதல்வர் யோகி ஆதித்யநாத் சந்தித்து அவரிடம் ஆசி வாங்கினார்...
மேலும் லக்னோவை அடைந்த ரஜினிகாந்த் அம்மாநிலத்தின் கவர்னர் ஆனந்தி பென் படேலை சந்தித்துள்ளார். அதற்குப் பின்பு சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார்.
இப்படி தனது படம் வெளியாவதற்கு முன்பு இமயமலை மட்டும் சென்று வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது திடீரென ஒரு நீண்ட ஆன்மீக பயணத்தை மேற்கொண்டு, சனாதன தர்மத்தின் கோவில்களுக்கு சென்று வருவது இடதுசாரிகள் விமர்சனத்திற்குள்ளான நிலையில், அந்த விமர்சனம் அனைத்தையும் கண்டு கொள்ளாமல் தற்பொழுது அயோத்தி ராமர் கோவிலுக்கும் சென்று ராமரை வணங்கியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அயோத்தி ராமர் கோவிலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவரது மனைவி லலிதாவும் இணைந்து ராமரை வழிபட்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வந்தது.
மத்திய அரசால் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலுக்கு தமிழகத்திலிருந்து இடதுசாரிகள் தரப்பினர்கள் பெருமளவில் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்ற சமயத்தில், அயோத்தில் இருக்கும் ராமர் கோவிலுக்கு செல்வதை பற்றி சூப்பர் ஸ்டார் கவலைப்பட்டதாக தெரியவில்லை ஆனால் தமிழகத்தில் உள்ள இடதுசாரிகள் எப்படி அயோத்தி ராமர் கோவிலுக்கு சூப்பர் ஸ்டார் செல்லலாம்! என்று கமெண்ட் களை சமூக வலைதளத்தில் முன்வைத்து வருகின்றனர்.
ஆனால் சூப்பர் ஸ்டார் இவை அனைத்தையும் கண்டு கொள்ளாமல், என் வழி தனி வழி என்பது போல சனாதன தர்மத்தை கடைபிடித்து வருவது இடதுசாரிகளுக்கு வயிற்றெரிச்சலை கொடுத்துள்ளது. இதற்கிடையில் ஜெய்லர் படத்தில் இசை வெளியீட்டு விழாவின் பொழுது இப்ப இருக்கும் ரஜினிகாந்தெல்லாம் ஒன்றுமில்லை முன்பு எனக்கு இருந்த கெட்ட பழக்கம் ஒன்று இல்லாமல் இருந்தால் இப்பொழுது இருக்கும் ரஜினிகாந்தை விட இன்னும் அதிகமாக வளர்ந்து இருக்கும் சூப்பர் ஸ்டாரை நீங்கள் கண்டிருப்பீர்கள் ஆதலால் ஒன்றே ஒன்று மட்டும் கேட்டுக்கொள்கிறேன் மதுப்பழக்கத்திற்கு மட்டும் அடிமையாகி விடாதீர்கள் அதை மட்டும் செய்யாதீர்கள் என்று கேட்டுக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது.