Kathir News
Begin typing your search above and press return to search.

கூடங்குளம், ஸ்டெர்லைட்டை தொடர்ந்து இப்போது விழிஞ்சம் துறைமுகத்தை எதிர்த்து போராட மீனவர்களை ஏவி விடும் கத்தோலிக் சர்ச்! இதற்கு காரணம் இதுதானா?

கூடங்குளம், ஸ்டெர்லைட்டை தொடர்ந்து இப்போது விழிஞ்சம் துறைமுகத்தை எதிர்த்து போராட மீனவர்களை ஏவி விடும் கத்தோலிக் சர்ச்! இதற்கு காரணம் இதுதானா?

Soma SundharamBy : Soma Sundharam

  |  5 Dec 2022 6:02 AM GMT

இந்தியாவின் தென்மாநிலங்களில் ஒன்றான கேரளாவிலும் திருவனந்தபுரத்தில் துறைமுகம் கட்டவேண்டும் என முதன்முதலில் குரல் கொடுத்தவர் திருவனந்தபுர சமஸ்தானத்தின் திவானாக இருந்த இராமசாமி ஐயர் ஆகும்.





கேரள அரசின் முன்னெடுப்பு

பின்னர், 1991ஆம் ஆண்டு, அப்போது இருந்த காங்கிரஸ் அரசு இத்துறைமுகம் அமைக்க பல நடவடிக்கைகளை எடுத்து வந்தது. சில ஆண்டுகள் கழித்து இத்திட்டதை தனியார் பங்களிப்போடு அமைக்க மீண்டும் கேரள அரசு முடிவெடுத்தது. இதற்காக இரண்டு கட்டமாக டெண்டர் விட முன்வந்தது.

முதற்கட்ட டெண்டரை 2004ஆம் ஆண்டு டெண்டரை அறிவித்தது, அதில் மூன்று நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது ஆனால் அப்போதைய மத்திய அரசு அந்நிறுவனங்களுக்கு பாதுகாப்பு அனுமதி வழங்கவில்லை. அதன்பிறகு இரண்டாம் கட்டமாக 2007-ல் நடத்தியது, இம்முறை தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களுக்கு யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. அதனால், 2010-ல் மீண்டும் கேரள அரசு முந்தைய திட்டத்தை கைவிட்டுவிட்டு "Landlord Port Model" மூலம் துறைமுகம் அமைக்க டெண்டர் அறிவித்தது அப்போதும் பங்கேற்ற நிறுவனங்களுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.





ஒருவழியாக 2015-ல் வேலை ஆரம்பிக்கப்பட்டது. 2014ஆம் ஆண்டு மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக

ஆட்சிக்கு வந்த பிறகு, இத்திட்டத்தை செயல்படுத்த ஆர்வம் காட்டியது. இதற்கான டெண்டரை கேரள அரசு 2015ஆம் ஆண்டு அறிவித்தது, இதில் குஜராத்தை சேர்ந்த தொழிலதிபர் அதானி மட்டுமே டெண்டரில் கலந்துக்கொண்டார். அதன் பிறகு அப்போதைய கேரள முதல்வர் உமன் சாண்டி மற்றும் தொழிலதிபர் அதானி முன்னிலையில் 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.





ஒப்பந்தத்தின் மதிப்பும்; இதனால் பல நாடுகளுக்கு ஏற்படும் இழப்பும்.

2015ஆம் ஆண்டில் இருவர் முன்னிலையில் கையெழுத்தான ஒப்பந்தத்தின் மதிப்பு ரூபாய்.7,525 கோடி ஆகும். கேரள அரசு அதானி நிறுவனத்திற்கு இத்துறைமுகம் கட்ட மட்டும் அனுமதி வழங்காமல் இதனை நாற்பது ஆண்டுகள் இந்நிறுவனம்

பாரம்பரிக்கவும், இயக்கவும் அனுமதி வழங்கப்பட்டது. இத்துறைமுகம் சர்வதேச கிழக்கு-மேற்கு கப்பல் போக்குவரத்து பாதைக்கு அருகில் அமைக்கப்படவுள்ளது.

மேலும் இத்துறைமுகத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் இதில் 18,000 TEU கண்டெயனர்கள் கொண்டு வரும் கப்பல்களை கையாளமுடியும். இதற்கு பெட்டியாக உள்ள துறைமுகம் என்றால் அது இலங்கையிலுள்ள கொழும்பு துறைமுகம்தான், அதில் இவ்வளவு பெரிய கப்பல்களை கையாளமுடியாது. இதனால் விழிஞ்சம் துறைமுகத்திற்கு கூடுதல் பலமாகும். இதனால் சீனா உள்ளிட்ட பல நாடுகளுக்கு பெரும் இழப்பாகும் ஏனென்றால் இதுவரை ஆண்டிற்கு இந்தியாவிற்கு வரும் கண்டெய்னர்களில் 30 லட்சம் கண்டெயனர்கள் கொழம்பு, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்களிலுள்ள துறைமுகங்களுக்கு செல்கிறது இதில் 85% கொழும்புவிற்கு செல்கிறது. மேலும் இத்துறைமுக்கதால் நம் நாட்டிற்கு வரும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி





பொருட்களை அதிகளவில் கண்டெய்னர்களை கொண்டுச்செல்லும் கப்பல்களை நாம் நேரடியாக கையாளலாம். இதன்மூலம் ஒரு TEU கண்டெய்னருக்கு ஆகும் செலவான 80-100 அமெரிக்க டாலர் மிச்சமாகும் என ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. நாட்டிற்கு இதனால் வருவாய் பெருகுவது மட்டுமல்லாமல், அம்மாநிலத்தை தொடர்ந்து அண்டை மாநிலமான தமிழகம் மற்றும் கர்நாடகவிலும் வேலைவாய்ப்புகள் அதிகளவில் உண்டாகும்.

கையெழுத்திட்ட நாளிலிருந்து, இன்றுவரை நிலவும் பிரச்சனையும்; இந்து அமைப்புகள் தரும் ஆதரவும்.

2015 ஆம் ஆண்டு கையெழுத்திட்ட நாளிலிருந்து அங்கு பல பிரச்சனைகள் இதற்கு வந்த வண்ணமாக உள்ளது. மேலும் கடந்த சில மாதங்களாக இப்பிரச்னை பூதாகரமாக வெடித்தது.

இதனை அங்குள்ள ஆளும்கட்சி அன்றிலிருந்து இது கத்தோலிக்க சர்ச்குள் மீனவர்களை தூண்டிவிடுகிறார்கள் என்கின்றனர். ஆனால், மறுபக்கம் இத்துறைமுகத்தை உரிய காலத்தில் முடிக்க வேண்டும் என அங்குள்ள இந்து அமைப்புகள் வற்புறுத்தி வருகின்றன. 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இதற்கு எதிராக போராட்டம் அங்குள்ள கத்தோலிக்க சர்ச் தலைமையில் தீவிரமாகின. இதனால் காரணமாக அதானி நிறுவனம் ஆகஸ்ட் 16 தேதியிலிருந்து கட்டுமானப்பணிகளை நிறுத்தியது. இதனைத் தொடர்ந்து அதானி நிறுவனம் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கை தொடர்ந்து அதில் மாநில அரசும், காவல்துறையும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றது. இதனை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம் ஆகஸ்ட் 29ஆம் தேதி அன்று, துறைமுகம் கட்டும் பணிகளை நிறுத்தக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்தது.

26ஆம் தேதி மீண்டும் சூடுபிடித்த போராட்டம்





உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த போதிலும், 100 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடந்துவந்தன. நீதிமன்றத்தில் கத்தோலிக்க சர்ச் தலைமையிலான போராட்டக்கார்கள் குழுவினர் நவம்பர் 22ஆம் தேதி, துறைமுகத்திற்கு வரும் வாகனங்களை மறிக்க மாட்டோம் என உறுதியளித்தது. அதனை மீறி நவம்பர் 26ஆம் தேதி, துறைமுகத்திற்கு கட்டுமான பொருட்களை ஏற்றிக்கொண்டு வந்த லாரிகளை கத்தோலிக்க சர்ச் தலைமையில் போராடும் போராட்டக்கார்கள் வாகனங்களை உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டனர். மேலும் அங்குள்ள இந்து அமைப்புகள் துறைமுகத்திற்கு ஆதரவாக, கத்தோலிக்க போராட்டக்கார்களுக்கு எதிராக போராடி வருகின்றனர்.

காவல்நிலையத்தை சூறையாடிய போராட்டக்காரர்கள்





நவம்பர் 26ஆம் தேதி நடத்திய போராட்டத்தில் போலீசார் 5 நபர்களை கைது செய்தனர். இவர்களை விடுவிக்க நவம்பர் 27ஆம் தேதி சர்ச் தலைமையிலான போராட்டக்காரர்கள் விழிஞ்சம் காவல் நிலையத்தை தாக்கினர். அதன் பிறகு திருவனந்தபுரம் மாநகர காவல் ஆணையர் முதலாக, 36 காவலர்கள் காயமடைந்தனர் என்றும் ரூபாய் 85 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதைமடைந்துள்ள என அவர் தெரிவித்தார். மேலும் இப்போராட்டத்தில் சம்பந்தப்பட்டதாக 3,000 பேர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நீதிமன்றத்தில் மாநில அரசு; என்ஐஏ விசாரணை

கேரள நீதிமன்றத்தில் அம்மாநில அரசு சமர்ப்பித்த வாக்குமூலத்தில்

இப்போராட்டம் பாதிரியார்கள் தலைமையில் நடந்தது என்று தெரிவித்தது. மேலும் அவர்கள் அன்று சர்ச்சில் மணி ஓசை எழுப்பி மக்கள் திரட்டி இதனை செய்தனர் என்றும், இதற்கு தலைமை வகித்தவர் பாதிரியார் எகேனே பெரைரா என்பவர் என்றும், அதுமட்டுமல்லாமல் 64 போலீசார் காயமடைந்தனர் என்றும் அரசு தெரிவித்தது. மேலும் துறைமுத்திற்கான பாதுகாப்பை மத்தியப் படைகளிடம் ஒப்படைக்க தயார் என அரசு நீதிமன்றத்தில் கூறியுள்ளது. இதுமட்டுமல்லாமல் இதனை விசாரிக்க என்ஐஏ அமைப்பு சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையை தொடங்கியிருக்கிறது. இதன்மூலம் அந்நிய நாட்டின் கைகள் இதன் பின் இருக்கிறதா என்பது தெரியவரும்.

தமிழகத்தில் நடந்தது தான் இப்போது கேரளாவில் நடக்கிறதா?

தமிழகத்தில் எப்படி பாதிரியார்கள் அண்டை நாடான சீனா பலனடைவதற்காக மக்களை மூளைச்சலவை செய்து தூத்துக்குடியிலுள்ள ஸ்டெர்லைட்டிற்கும், கூடங்குள அனுமின் நிலையத்திற்கு எதிராக போராட வைத்தார்களோ, இப்போது கேரளாவிலும் அப்படி செய்யத் தொடங்கிவிட்டது போல் இச்சம்பவம் தெரிகிறது என பலர் பேசி வருகிறார்கள்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News