Kathir News
Begin typing your search above and press return to search.

மோடி 3.0-ன் 100 நாட்கள்: வலுமிக்க எதிர்காலத்திற்கு சுகாதார துறைகளில் லட்சிய சீர்திருத்தங்கள்..

மோடி 3.0-ன் 100 நாட்கள்: வலுமிக்க எதிர்காலத்திற்கு சுகாதார துறைகளில் லட்சிய சீர்திருத்தங்கள்..
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  29 Sep 2024 5:22 PM GMT

பிரதமர் நரேந்திர மோடியின் மூன்றாவது பதவிக்காலத்தின் தொடக்க 100 நாட்களில், நாட்டின் சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளை வலுப்படுத்த வடிவமைக்கப்பட்ட தொடர்ச்சியான அற்புதமான முயற்சிகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த லட்சியத் திட்டங்கள் சுகாதார அணுகல், மருத்துவக் கல்வி, ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகின்றன. ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் மக்கள் ஆரோக்கியத் திட்டத்தின்பலன்களை மூத்தக் குடிமக்களுக்கு விரிவுபடுத்துவதிலிருந்து, டிஜிட்டல் மயமாக்கப்பட்ட தடுப்பூசி சேவைகளுக்கான யூவின் போர்டல் போன்ற புதுமையான தளங்களைத் தொடங்குவது வரை, ஆரோக்கியமான மற்றும் சிறந்த கல்வியறிவு பெற்ற சமூகத்தை உருவாக்குவதற்கு அரசு முன்னுரிமை அளித்துள்ளது. கூடுதலாக, தேசிய மருத்துவ பதிவு போர்ட்டலை நிறுவுதல், 75,000 புதிய மருத்துவ இடங்களை உருவாக்குதல், புற்றுநோய் சிகிச்சை மற்றும் உயிரித்தொழில்நுட்பத்தில் கொள்கை சீர்திருத்தங்கள் போன்ற முயற்சிகள் தன்னம்பிக்கையையும் நெகிழ்திறனையும் கொண்ட தேசத்தை உருவாக்குவதற்கான நீண்டகால பார்வையைப் பிரதிபலிக்கின்றன.


ஆயுஷ்மான் பாரத்:

ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டம் என்ற முதன்மைத் திட்டத்தின் கீழ் வருமானத்தைப் பொருட்படுத்தாமல் 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து மூத்த குடிமக்களுக்கும் சுகாதாரப் பாதுகாப்பு வழங்க மத்திய அமைச்சரவை செப்டம்பர் 11, 2024 அன்று ஒப்புதல் அளித்தது. ஆறு கோடி மூத்த குடிமக்களைக் கொண்ட சுமார் 4.5 கோடி குடும்பங்கள் 5 லட்சம் ரூபாய் இலவச மருத்துவக் காப்பீட்டுடன் பயனடைவதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

யூவின் போர்டல்:

தடுப்பூசி சேவைகளை முழுமையாக டிஜிட்டல் மயமாக்குவதற்காக உருவாக்கப்பட்ட யூவின் போர்ட்டல், உலகளாவிய நோய்த்தடுப்பு திட்டத்தின் கீழ் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பிறப்பு முதல் 17 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி பதிவுகளை பராமரிக்கிறது. 2024, செப்டம்பர் 16 நிலவரப்படி, 6.46 கோடி பயனாளிகள் பதிவு செய்துள்ளனர். 1.04 கோடி தடுப்பூசி அமர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. 23.06 கோடி நிர்வகிக்கப்பட்ட தடுப்பூசி அளவுகள் போர்ட்டலில் பதிவு செய்யப்பட்டுள்ளன.


3 புற்றுநோய் மருந்துகளுக்கு சுங்க வரியிலிருந்து விலக்கு:

நாட்டில் உள்ள 27 லட்சம் புற்றுநோயாளிகளுக்கு பயனளிக்கும் வகையில், மூன்று புற்றுநோய் மருந்துகளுக்கு சுங்க வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. டிராஸ்டுஜுமாப் டெரக்ஸ்டெக்கான் (மார்பக புற்றுநோய்), ஒசிமெர்டினிப் (நுரையீரல் புற்றுநோய்), துர்வாலுமாப் (நுரையீரல் புற்றுநோய்) ஆகிய மூன்று புற்றுநோய் மருந்துகள் வெவ்வேறு கட்டி வகைகளுக்குப் பயன்படுத்தப் படுகின்றன.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News