Kathir News
Begin typing your search above and press return to search.

சிறப்பு கட்டுரை : மண்டல் கமிஷன்! O.B.C இட ஒதுக்கீடும், பா.ஜ.க-வும்!

மண்டல் கமிஷனை 1979 ல் அமைக்க காரணமாக இருந்தவர்கள் அன்றைய ஜன் சங், இன்றைய பா.ஜ.க.

சிறப்பு கட்டுரை : மண்டல் கமிஷன்! O.B.C இட ஒதுக்கீடும், பா.ஜ.க-வும்!

Yuvaraj RamalingamBy : Yuvaraj Ramalingam

  |  20 Dec 2021 1:30 AM GMT

மண்டல் கமிஷனை அமல்படுத்தியதால் VP சிங் அரசாங்கத்தை பா.ஜ.க கவிழ்த்தது, எனவே அவர்கள் OBC மக்களுக்கு எதிரி என்பது தான் தமிழகத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள கருத்து.

ஆனால் உண்மை என்ன? சற்று வரலாறோடு பார்ப்போம்!

நேரு, இந்திரா காந்தி செவிசாய்க்காத பலநாள் கோரிக்கையான OBC மக்களைப்பற்றிய ஆய்வுக்கான மண்டல் கமிஷனை பிரதமர் மொராஜி தேசாய் அவர்கள் ஜனவரி 1, 1, 1979 அன்று அமைத்தார்.

பா.ஜ.க வின் முந்தைய அரசியல் வடிவமான ஜன் சங்கம் உள்ளடக்கிய ஜனதா கட்சியின் பிரதமர் அவர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். மொராஜி அரசாங்கத்தை தாங்கிய பல MP க்கள் ஜன் சங்கத்துக்காரர்கள். குறிப்பாக மொராஜியின் அமைச்சரவையில் 3 ஆர்.எஸ்.எஸ் ஸ்வயம்சேவகர்கள் கேபினட் மந்திரிகளாக இருந்தனர். (வாஜ்பாய்--வெளியுறவு துறை அமைச்சசர், அத்வானி, சிக்கந்தர் பகத்). அந்த மந்திரிசபை எடுத்த முடிவால் தான் OBC மக்களை பற்றி ஆய்வு செய்ய மண்டல் கமிஷன் அமைக்கப்பட்டது.

மண்டல் தனது பரிந்துரையை December 31, 1980அளித்தும் அப்போது பிரதமராக இருந்த இந்திராவும் அதன் பின்னர் வந்த ராஜிவ் காந்தியும் அதனை கிடப்பில் போட, 1989 ல் 85 பா.ஜ.க மேப் க்களின் ஆதரவோடு ஆட்சிக்கு வந்த V.P.சிங் August 7, 1990 அன்று மண்டல் கமிஷனை அமல்படுத்தினார்.

ராமர் கோவில் விவகாரத்தில் VP சிங், பா.ஜ.க நிலைப்பாட்டிற்கு எதிராக இருப்பதை கண்டு அவ்வரசாங்கத்திற்கு அளிக்கப்பட்ட ஆதரவை வாபஸ் பெற்றது பா.ஜ.க. 10 Nov 1990 அன்று VP சிங் அரசு கவிழ்க்கப்பட்டது(OBC களுக்கான இட ஒதுக்கீடு அமல்படுத்தி சரியாக மூன்று மதம் கழித்து).

ஆனால் OBCஇடஒதுக்கீடு அமல்படுத்தியத்தின் காரணமாக VP சிங் அரசாங்கத்தை பா.ஜ.க கலைத்ததாக பொய் கட்டமைக்கப்பட்டுள்ளது!

ஆனால் உண்மையென்ன?

மண்டல் கமிஷனை 1979 ல் அமைக்க காரணமாக இருந்தவர்கள் அன்றைய ஜன் சங், இன்றைய பா.ஜ.க. அதை அமல்படுத்தும் போது போது எதற்காக எதிர்க்க போகிறார்கள்?

VP சிங் அரசாங்கமே பா.ஜ.க ஆதரவில் தான் நடைபெறுகிறது. மண்டல் கமிஷனை செயல்படுத்துவதை நிறுத்தவேண்டுமென்றால் அதை அறிவிக்கும் முன்னரே அரசாங்கத்திற்கு அளிக்கும் ஆதரவை வாபஸ் பெற்று நிறுத்தி இருக்கலாம். ஆனால் அவர்கள் அதை அறிவித்து மூன்று மாதம் கழித்துதான் அரசுக்கான ஆதரவை வாபஸ் வாங்கினார்கள்.

மண்டலை எதிர்த்து பா.ஜ.க தலைவர்கள் பேசியதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் ஆதரித்ததுக்கு உண்டு. 1989 ஆம் ஆண்டு பா.ஜ.க-வின் தேர்தல் வாக்குறுதியில் பக்கம் 381 தெளிவாக கூறுவது, "நாங்கள் மண்டல் கமிஷனை அமல்படுத்துவோம்" என்று.

செப்டம்பர் 6,1990 அன்று Decisions on Mandal Commission Report மீதான விவாதத்தில், பா.ஜ.க சார்பாக பேசிய காஷிராம் ராணா அவர்கள் VP சிங் அரசாங்கத்தின் முடிவை ஆதரித்து பா.ஜ.க நிலைப்பாட்டை பேசி உள்ளார். அதே விவாதத்தில் மண்டல் கமிஷனை எதிர்த்து ராஜிவ் காந்தி அவர்கள் இரண்டு மணி நேரம் உரை நிகழ்த்தினார்.

ஆக மண்டல் கமிஷன் அமைத்ததும் அன்றைய ஜன் சங் இன்றைய பா.ஜ.க ஆதரவில் அமைந்த அரசாங்கம். அதை அமல்படுத்தியதும் 85 பா.ஜ.க MP களின் ஆதரவில் அமைந்த அரசாங்கம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மண்டல் கமிஷனை அமல்படுத்துவோம் என்று தேர்தல் வாக்குறுதி (1989) கொடுத்ததும் பா.ஜ.க. VP சிங் அரசு அதை அமல்படுத்தியபோது அதன் மீது நடந்த விவாதத்தில் அதை ஆதரித்து பேசியது பா.ஜ.க. ஆனால் எதிர்த்தார்கள் என்பதற்கு இவர்களிடம் சில பத்திரிக்கையாளர்கள் எழுதிய Opinionated Article ஐ தவிர வேறு ஏதாவது நாம் கொடுப்போதுபோல தீர்க்கமான ஆதாரம் இருக்கிறதா என்று கேட்டால் இல்லை !!

இதில் தி.மு.க பங்கு என்ன? VP சிங் அரசு அமைய தி.மு.க ஆதரவே கொடுக்கவில்லை. காரணம் 1989 லோக் சபாவில் தி.மு.க-விற்கு எம்.பி.க்கள் இல்லை. ஆனால் கருணாநிதி மருமகன் மாறனை ராஜ்ய சபாவில் இருந்து மந்திரியாக ஆனார்.

மண்டல் கமிஷன் அமைத்த அரசாங்கத்திலும் தி.மு.க இல்லை. அதனை அமல்படுத்திய VP சிங் அரசாங்கம் அமையவும் தி.மு.க கரணம் இல்லை. பிறகு என்னதான் செய்தார்கள் என்றால்? மெரினா கடற்கடையில் கூட்டம் போட்டோம் என்கிறார்கள். அதுவா மண்டல் கமிஷன் ஐ அமல்படுத்த உதுவியது?

நேரு காலம் தொட்டு இந்திரா ராஜிவ் வரை OBC இடஒதுக்கீட்டுக்கு எதிராக நின்ற காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைத்ததுதான் அவர்கள் செய்த உதவி.

பா.ஜ.க எதிர்த்ததாக VP சிங் அவர்கள் பேட்டி கொடுத்துள்ளார்கள் என்று சிலர் கேட்க கூடும். அது அவர் உருவாக்க நினைத்த "பா.ஜ.க பிற்படுத்தப்பட்டவர்களுக்கு எதிரான கட்சி" என்ற பிம்பம். அதற்கும் அதே கேள்விதான். அவர் வெறும் வாயில் முழம் போடலாம், ஆனால் ஆதாரம் இல்லை. அவர் அரசாங்கம் மண்டல் கமிஷன் மீது நடத்திய விவாதத்தில் பா.ஜ.க மண்டல் கமிஷனை ஆதரித்து பேசியதை ஆதாரமாக கொடுத்து இருக்கிறோம். அவருக்கு ஆர்.எஸ்.எஸ். மீதும் பா.ஜ.க மீதும் ஒரு தீராத காழ்ப்புணர்வு இருந்தது. அது அவர் பா.ஜ.க ஆதரவில் பிரதமராக அமர்ந்து கொண்டு ஆர்.எஸ்.எஸ் விமர்சனம் செய்வதில் இருந்து ஆரம்பித்து அதே காலத்தில் ராம ஜென்ம பூமியை அரசுடைமையாக்க முயன்றதுவரை வெளிப்பட்டது.

இங்கு மண்டல் கமிஷன் அமல் படுத்திய VP சிங் கொண்டாடப்படுவதில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட அதனை அமைத்த மொராஜி தேசாய் பேசப்படுவதில்லை. அவர் பங்கு விவாதிக்கப்படுவதில்லை. அவர் அரசாங்கம் இடையில் கவிழாமல் இருந்திருந்தால் மண்டல் அறிக்கை வரும்போது அவர் பிரதமராக இருந்திருப்பார். அவரே அதனை அமல்படுத்தியும் இருப்பார். VP சிங் தேவையே இருந்திருக்காது. அதன் சூட்சமத்தை அறிந்தால் இதன் பின்னர் இருக்கும் அரசியலை உணரலாம்.

பா.ஜ.க தேர்தல் அறிக்கை மற்றும் Parliament Proceedings Document இந்த லிங்கில் கூட பதிவிறக்கம் செய்யலாம்

Next Story
கதிர் தொகுப்பு
Trending News