Kathir News
Begin typing your search above and press return to search.

தேச விரோத நடவடிக்கைகளுக்கு 12.90 கோடி- 'ஜமாத் உலாமா-இ- ஹிந்த்' அமைப்பு மீது LRO புகார்! @Legallro

தேச விரோத நடவடிக்கைகளுக்கு  12.90 கோடி- ஜமாத் உலாமா-இ- ஹிந்த் அமைப்பு மீது LRO புகார்! @Legallro

Saffron MomBy : Saffron Mom

  |  27 March 2021 12:25 PM GMT

FCRA விதிமீறல்கள் மற்றும் வெளிநாட்டு நிதி சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்படுவதைக் கண்காணிக்கும் சட்ட உரிமைகள் ஆய்வகம் (LRO), ஜமாத் உலாமா இ ஹிந்த் (Jamiat-Ulama-i-Hind) என்ற அமைப்பு ஜெர்மனியை சேர்ந்த Misereor என்ற கத்தோலிக்க அமைப்பிடமிருந்தும், அல் ஜமான் உள்ளிட்ட பல்வேறு அமெரிக்க/இங்கிலாந்து நன்கொடையாளர்களிடமிருந்தும் 12.90 கோடி ருபாய் பெற்றுள்ளதாக கூறியுள்ளது.

இதன் மூலம் ராணுவத்திற்கெதிராக கல்லெறிபவர்கள், கலவரக்காரர்கள், நாட்டுக்கெதிராக சதி செய்பவர்கள் ஆகியோர்க்கு சட்ட ரீதியாக மற்றும் நிதி உதவி புரிவதாகவும் LRO குற்றம் சுமத்தியுள்ளது. இது குறித்து உள்துறை அமைச்சகத்திடம் புகார் அளித்துள்ளதாகவும், விசாரணை கோரியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதில் மற்றொரு குறிப்பிடத்தகுந்த விஷயம், இவர்களுக்கு வெளிநாட்டு நிதி வழங்கிய Misereor என்ற ஜெர்மனியை சேர்ந்த கத்தோலிக்க கிறிஸ்தவ அமைப்பு, டெல்லி வன்முறை வழக்கில் குற்றம் சாட்டப்பவர்களுக்கு நிதி திரட்டிய HRLN என்ற வழக்கறிஞர் அமைப்புக்கு ஏற்கனவே நிதி வழங்கியர்கள் ஆவர்.

இது குறித்து LRO ஏற்கனவே கடந்த செப்டம்பரில் தகவல்கள் வெளியிட்டுள்ளது. டெல்லி கலவரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக வாதாடும் வழக்கறிஞர் காலிங் கோன்ஸ்லவ்ஸ் என்பவரின் HRLN வழக்கறிஞர் அமைப்பு(Human Rights Law Network), ஐரோப்பிய சர்ச்சுகளிடமிருந்து 50 கோடி ரூபாய் பெற்றுள்ளது. இந்த பணம் சட்டப்பூர்வமாக, குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக கலவரம் செய்தவர்கள்(Anti -CAA rioters ), ஷாகின் பாக்ஹ் 'போராளிகள்' ஆகியோருக்கு ஆதரவாக வாதாடப் பயன்படுத்தப்பட்டது. இதில் சாஹிரா சபூர் என்ற கர்ப்பிணியும் அடக்கம். .

இதற்காக வெளிநாடுகளிலிருந்து நிதி பெற்று இந்தியாவில் கலவரத்தை தூண்டி விட முயற்சிப்பதாக காலின் கைது செய்யப்பட வேண்டும் என்று LRO ஏற்கனவே கடந்த செப்டம்பரில் கேட்டுக்கொண்டது. இவர்களுக்கு நிதி அளித்த முக்கியமான நான்கு ஐரோப்பிய கிறிஸ்தவ அமைப்புகளில் ஒன்றான இதே Misereor என்ற ஐரோப்பிய கத்தோலிக்க நிறுவனம்தான் ஜமாத் உலாமா இ ஹிந்த் அமைப்பிற்கும் நிதி வழங்கியுள்ளது.

இது குறித்து உள்துறை அமைச்சகத்துக்கு எழுதி உள்ளதாகவும், இதன் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று LRO வலியுறுத்தியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News