தார் பாலைவனத்தில் 1,72,000 ஆண்டுகளுக்கு முன் ஓடிய ஆறு - ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு.!
தார் பாலைவனத்தில் 1,72,000 ஆண்டுகளுக்கு முன் ஓடிய ஆறு - ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு.!
![தார் பாலைவனத்தில் 1,72,000 ஆண்டுகளுக்கு முன் ஓடிய ஆறு - ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு.! தார் பாலைவனத்தில் 1,72,000 ஆண்டுகளுக்கு முன் ஓடிய ஆறு - ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு.!](https://kathir.news/static/c1e/client/83509/migrated/022d9a4d2091f0f726838969a709eaf2.jpg)
இந்தியாவில் பெரிய பாலைவனம் இன்று சிறப்பு தார் பாலைவனத்துக்கு உள்ளது. இது ராஜஸ்தான் குஜராத் மாநிலங்களில் பரவி உள்ளது. இந்த பாலைவனத்தில் பெரும்பகுதி அதாவது 85 சதவீதம் இந்தியாவிலும் 15% பாகிஸ்தானிலும் உள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரையில் தார் பாலைவனத்தில் 61% ராஜஸ்தானில் இருக்கிறது. இந்த பாலைவனம் பற்றி ஜெர்மனியில் உள்ள நெக்ஸ்ட் பிளாக் இன்ஸ்டிடியூஷன், தமிழ்நாடு சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் கொல்கத்தாவில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் கூட்டாக ஆராய்ந்து வந்தனர்.
அவர்கள் தங்கள் கண்டுபிடிப்பு குறித்து குவாட்டர்னரி சயின்ஸ் ரிவ்யூ பத்திரிகையில் வெளியிட்டுள்ளனர். அந்த ஆராய்ச்சியின் முடிவு தார் பாலைவனத்தில் ஒரு லட்சத்து 72 இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக, பிகாநீர் அருகே இன்றைய நவீன ஆற்றில் இருந்து 200. கிலோ மீட்டர் தொலைவில் ஒரு ஆறு ஓடுகிறது என்பதையும் காட்டுகிறது. தார் பாலைவனத்தின் இடையில் ஒரு ஆறு ஓடியது. பாலியோதலித் மக்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்கி இருக்க வேண்டும். மேலும் அது இடம் பெயர்ந்து வந்து அவர்களுக்கு வாழ்விடமாக இருந்திருக்கிறது.
"தார் பாலைவனத்திற்கு வளமான, பழமையான வரலாறு உண்டு. இந்த வறண்ட நிலப் பரப்புகளில் தற்கால மனிதன் வாழ்ந்து, வளர்ந்து உள்ளான்" என்று ஆராய்ச்சியாளர் ஜிம்பா லாங்கான் கூறினார். செயற்கைக்கோள் படங்கள் ஆற்றின் வழித்தடங்களில் கால்வாய்களை கொண்டிருக்கவேண்டும் என்று காட்டுகிறது. இதன் முடிவு தார் பாலைவனத்தில் கிராமத்தில் ஒரு லட்சத்து எழுபத்தி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அதற்கான வலுவான ஆதாரம் இருக்கிறது என்று தெரியவந்துள்ளது.