Kathir News
Begin typing your search above and press return to search.

சட்டவிரோத மதமாற்றங்களுக்கு 4.05 கோடி நன்கொடை - 'கத்தோலிக்க மிஷன் சொசைட்டி பார் ட்ரைபல் எஜுகேஷன்' மீது LRO புகார்! @Legallro

சட்டவிரோத மதமாற்றங்களுக்கு 4.05 கோடி நன்கொடை  - கத்தோலிக்க மிஷன் சொசைட்டி பார் ட்ரைபல் எஜுகேஷன் மீது LRO புகார்! @Legallro

Saffron MomBy : Saffron Mom

  |  16 May 2021 2:47 AM GMT

இந்தியாவில் உள்ள தங்கள் கூட்டாளிகளின் உதவியுடன் வெறித்தனமாக செயல்படும் சுவிசேஷ மிஷனரிகளின் (Evangelist Missionaries) உலகளாவிய நெட்வொர்க், மோசடி, கட்டாயப்படுத்துதல், கவர்ச்சி மற்றும் வற்புறுத்தல் மூலம் கிறிஸ்தவத்திற்கு மக்களை சட்டவிரோதமாக மாற்றுவதற்கு வெளிநாட்டு நிதிகளை வெட்கமின்றி பயன்படுத்துகிறது.

FCRA விதிமீறல்கள் மற்றும் வெளிநாட்டு நிதி சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்படுவதைக் கண்காணிக்கும் சட்ட உரிமைகள் ஆய்வகம் (LRO), கத்தோலிக்க மிஷன் சொசைட்டி பார் ட்ரைபல் எஜுகேஷன் (பழங்குடியினரின் கல்விக்கான கத்தோலிக்க மிஷனரி அமைப்பு) 4.05 கோடி ரூபாயை வெளிநாடுகளில் இருந்து நன்கொடையாக பெற்று சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதாக குற்றம் சாட்டியுள்ளது.

இந்த நிறுவனம், ஸ்பெயின் நாட்டை சேர்ந்த மனோஸ் யுனிதாஸ் என்ற மற்றொரு தன்னார்வ அமைப்பின் ப்ராக்ஸ்ஸி (proxy) போல செயல்படுகிறது.

தற்போதைய கொரானா பெருந்தொற்று பரவலினால் ஏற்படும் வறுமையை காரணமாக்கி, மதம் மாற்றம் செய்ய முயற்சிக்கிறது. மேலும் இத்தகைய குழந்தைகளின் புகைப்படங்களை சர்வதேச அளவில் விற்று பணமாக்குகிறது.

இது குறித்து LRO உள்துறை அமைச்சகத்திற்கு விசாரணை கோரி கடிதம் எழுதியுள்ளனர். உள்துறை அமைச்சகத்திற்கு LRO அளித்த புகார் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட்டு, தீவிரமான FCRA மீறல்களை மட்டுமல்லாமல், தேசிய பாதுகாப்பு பாதிப்புகளையும் பற்றி அக்கறையுடன் விசாரிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து உடனடியாக பதிலளித்த தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய (National Commission for Protection Of Child Rights) தலைவர் ப்ரியன்க் காணூங்கோ, இதை 'குறித்துக் கொண்டதாக' (noted) தெரிவித்தார். நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



Next Story
கதிர் தொகுப்பு
Trending News