சட்ட விரோத மதமாற்றங்களுக்கு 6.56 கோடி - 'அல்பெல்லா பாய்ஸ் ஹோம்' மீது LRO புகார்! @LegalLro
![சட்ட விரோத மதமாற்றங்களுக்கு 6.56 கோடி - அல்பெல்லா பாய்ஸ் ஹோம் மீது LRO புகார்! @LegalLro சட்ட விரோத மதமாற்றங்களுக்கு 6.56 கோடி - அல்பெல்லா பாய்ஸ் ஹோம் மீது LRO புகார்! @LegalLro](https://kathir.news/h-upload/2021/03/26/963242-albella-boys-home.webp)
இந்தியாவில் உள்ள தங்கள் கூட்டாளிகளின் உதவியுடன் வெறித்தனமாக செயல்படும் சுவிசேஷ மிஷனரிகளின் (Evangelist Missionaries) உலகளாவிய நெட்வொர்க், மோசடி, கட்டாயப்படுத்துதல், கவர்ச்சி மற்றும் வற்புறுத்தல் மூலம் கிறிஸ்தவத்திற்கு மக்களை சட்டவிரோதமாக மாற்றுவதற்கு வெளிநாட்டு நிதிகளை வெட்கமின்றி பயன்படுத்துகிறது.
FCRA விதிமீறல்கள் மற்றும் வெளிநாட்டு நிதி சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்படுவதைக் கண்காணிக்கும் சட்ட உரிமைகள் ஆய்வகம் (LRO) டார்ஜிலிங்கை சேர்ந்த அலபெல்லா பாய்ஸ் ஹோம் சட்டவிரோத மதமாற்றங்களுக்காக 6.56 கோடி ரூபாயை வெளிநாட்டு நிதியாக பெற்றதாக குற்றம் சாட்டியுள்ளது.
1961ம் ஆண்டு இங்கிலாந்தை சேர்ந்த இரண்டு மிஷனரிக்களால் ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பு டார்ஜீலிங்கில் அமைந்துள்ளது. குழந்தைளுக்கான உறைவிடப்பள்ளியும் சேர்ந்து நடந்து வருகிறது.
இந்நிதியில் அனாதைக் குழந்தைகளையும், குழந்தைகளையும் குறிவைத்து சட்டவிரோதமாக கிறிஸ்தவத்திற்கு மதம் மாற்றும் வேளையில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டி, இது குறித்து உள்துறை அமைச்சகத்திற்கு விசாரணை கோரி கடிதம் எழுதியுள்ளதாக LRO தெரிவித்துள்ளனர்.