Kathir News
Begin typing your search above and press return to search.

கடந்த வாரத்தில் மட்டும் நடந்த இந்து மத வெறுப்பு சம்பவங்கள் - ஒரு தொகுப்பு.!

கடந்த வாரத்தில் மட்டும் நடந்த இந்து மத வெறுப்பு சம்பவங்கள் - ஒரு தொகுப்பு.!

கடந்த வாரத்தில் மட்டும் நடந்த இந்து மத வெறுப்பு சம்பவங்கள் - ஒரு தொகுப்பு.!

Saffron MomBy : Saffron Mom

  |  1 Dec 2020 7:05 AM GMT

இந்துக்கள் மற்றும் இந்து மதத்தின் மீதான தாக்குதல்கள் இந்தியாவிலும் அயல்நாடுகளிலும் தொடர்ச்சியாக சில நூற்றாண்டுகளாகவே நடந்து வருகிறது. பல்லாண்டுகளாக இந்த தாக்குதல்களுக்கு தாக்குதல்களின் அளவும், வீரியமும் உலகத்தால் புறக்கணிக்கப்பட்டு வந்தது.

கொலைகள், பாலியல் வன்முறை, கட்டாய மதமாற்றம், நில அபகரிப்பு, பண்டிகைகளின் மீதான தாக்குதல், கோவில்களை சூறையாடுதல் மற்றும் கடவுள் சிலைகளை இழிவுபடுத்துதல், வெறுப்பு பேச்சு, சட்டரீதியான பாகுபாடு, இந்துக்கள் மீது எப்போதும் இல்லாத வகையில் வெறுப்புடன் நடக்கும் தாக்குதல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

ஒவ்வொரு வாரமும் இது போன்று இந்துக்கள் மீது நடந்த, வெளி உலகத்திற்கு தெரிய வந்த தாக்குதல்களின் தொகுப்பினை இங்கு வழங்குகிறோம்.

இந்தியா

1.திருவண்ணாமலையின் ஜவ்வாது மலைகளில் அமைந்துள்ள ஒரு பழங்குடியினர் குடியிருப்பில் இருந்து, பதிமூன்று வயது பழங்குடி சிறுமியை 49 வயது மத போதகர் ஜெயராஜ் கடத்திச் சென்றுள்ளார். கடந்த நான்கு வருடங்களாக இந்த கிராமத்தில் பிரசங்கத்தில் ஈடுபட்டு வந்துள்ள ஜெயராஜ் ஒரு சமூக சேவகரை போல் நடித்து வந்துள்ளார். இந்த மத போதகரின் பின்னணியை காவல்துறையினர் விசாரித்த பொழுது அவர் ஏற்கனவே இருமுறை திருமணம் செய்தவர என்பதும் அவரது இரு மனைவிகளும் அவரை விட்டுவிட்டு சென்று விட்டதும் தெரியவந்தது. பாஸ்டர் மீது கடத்தல் வழக்கைப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், அவரையும் அந்த சிறுமியையும் தேடி வருகின்றனர்.

2. OTT தளங்களில் ஹிந்து தர்மத்தை தாக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. படைப்பாற்றல் என்ற பெயரில் ஒரு முஸ்லிம் கதாநாயகனும், ஹிந்து கதாநாயகியும் கோவில் வளாகத்தில் பின்னணியில் ஆரத்தி நடந்து கொண்டிருக்கும் பொழுது முத்தமிடும் காட்சிகளைப் படமாக்கி ஹிந்து உணர்வுகள் மீண்டும் புண்படுத்தப்பட்டுள்ளன. மீரா நாயரின் 'the suitable boy' என்ற இணையதள தொடர் வழக்கமாக இருக்கிறது. அதாவது ஹிந்துக்கள் எப்போதும் மூடிய மனம் கொண்ட மதவெறியர்கள், ஆனால் முஸ்லிம்கள் மிகவும் பெருந்தன்மையான முற்போக்காளர்கள். மேலும் பெரும்பான்மை வாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள்.

3.ஹரியானாவின் பரிதாபாத் நகரில் சில முஸ்லிம் குண்டர்கள் ஒரு இந்துக் குடும்பம் வசிக்கும் வீட்டிற்குள் நுழைந்து சாத் பூஜை நடந்து கொண்டிருக்கும் பொழுது ஒரு இளம் சிறுமியை கடத்த முயற்சித்தனர். பீகாரில் இருந்து சமீபத்தில்தான் ஹரியானாவில் அந்த சிறுமியின் குடும்பம் வந்து இருந்தது.

4. புதுச்சேரியின் காரைக்காலில் ஒரு இந்து கோவிலுக்குள் நுழைந்த ஒரு முஸ்லிம் ஆண், ஹிந்துக் கடவுள்களை பற்றியும் கோவில் சிற்பங்களை பற்றியும் பேஸ்புக் லைவில் ஆபாசமான கமெண்ட்டுகளை அடித்தான். சபீர் அஹமதுவின் மகனாகிய மன்சூர் அலி இக்குற்றம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளான்.

5. பீகாரின் கதிஹார் மாவட்டத்தில் ஒரு இஸ்லாமிய கும்பல் சாத் பூஜை நடக்கவிருந்த இடத்தை சூறையாடியது. பூஜை நடக்கவிருந்த அதிகாலையில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. உள்ளூர் தகவல்களின்படி ஒரு முஸ்லீம் கும்பல், பூஜை கொண்டாட்டங்களை தொந்தரவு செய்து, பந்தல்களை அகற்றி, அந்தப் பகுதியில் ஒரு மதவாத பதற்றத்தை ஏற்படுத்தியது. சாயந்தரம் சாத் பூஜை நடைபெற இருந்த நிலையில் காலையில் அந்தப் பந்தலை எல்லாம் அகற்றி சூறையாடி, அங்கே சிறுநீர் கழித்து அட்டூழியத்தில் ஈடுபட்டனர்.

6. தமிழ்நாட்டின் ஓசூரில் இந்து மகா சபா மாநில செயலாளர் நாகராஜ், பொது வெளியில் வைத்து அடையாளம் தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.

7. ஜார்க்கண்டின் ஹசாரிபாக் மாவட்டத்தில், மற்றொரு லவ் ஜிகாத் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஒரு முஸ்லிம் ஆண், ஒரு தலித் இந்து விதவையுடன் உறவில் ஈடுபட்டுள்ளார். அவர் தன்னுடைய அடையாளத்தை மறைத்து அர்ஜுன் என தன்னை காட்டிக் கொண்டுள்ளார். அந்தப் பெண்மணி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டபொழுது அவன் உண்மையை கூறி அவர் இஸ்லாமிற்கு மதம் மாறினால் மட்டுமே திருமணம் செய்து கொள்ள முடியும் என்று கூறியிருக்கிறார். அந்த ஆணின் உண்மையான பெயர் முஹம்மது ரசீம்.

8. உத்திரபிரதேசத்தின் கௌதம புத்தர் நகர் மாவட்ட நீதிமன்றம் சதாப் ஆலம் என்பவருக்கு ஒரு மைனர் இந்து பெண்ணை கடத்தி கற்பழித்ததற்காக 20 வருடம் கடுங்காவல் தண்டனையும் 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தது. டேனிக் ஜர்கன் பத்திரிகையின் படி, இந்த சம்பவம் 2015 இல் நடந்தது. பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த மாணவியை கடத்தியதாக மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சதாப் ஆலம் மீது அந்தப் பெண்ணின் தந்தை புகார் அளித்திருந்தார்.

9. உத்திரப்பிரதேசத்தில் மற்றுமொரு லவ் ஜிகாத் வழக்காக, 21 வயது இந்து பெண்ணின் குடும்பம் பக்கத்தில் வசிக்கும் முஸ்லிம் குடும்பத்தின் மீது தங்கள் மகளை கடத்தியதாக புகார் அளித்துள்ளனர்

10. கான்பூரில் மற்றொரு வழக்கில் ஒரு இந்து பெண்ணை சச்சின் ஷர்மா என்று போலியாக பெயர் கூறி பழகிய சாஹில்,திருமணம் செய்த பிறகு அந்தப் பெண்ணை மாட்டுக்கறி உண்ண வைத்து ஒரு மாலுவியுடன் பாலியல் உறவு வைத்துக்கொள்ள கட்டாயப்படுத்தி உள்ளான். இதை மறுத்து விட்டால் அவர்களின் பிறந்த குழந்தை கொலை செய்யப்படும் என்றும் அவருடைய நெருங்கிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்படும் என்றும் மிரட்டி வந்தான்.

11. டெல்லியில் பேகம்பூரில் உள்ள ஒரு கோவிலில் டஜன் கணக்கான இந்து கடவுள்களின் சிலைகள் சூறையாடப்பட்டன. நவம்பர் 24ஆம் தேதி அன்று இரவு இந்த செயல்கள் நடைபெற்றன. சமூக விரோத கும்பல்கள் சிலைகளில் இருந்து தலையை மட்டும் அகற்றிவிட்டு அப்பகுதியில் இருந்து தப்பித்துச் சென்றனர்.

12. டெல்லியின் காசிப்பூரின் தெருக்களில் பசு மாடுகளின் தலைகள் ரத்த வெள்ளத்தில் கிடந்த வீடியோக்கள் வெளிவந்தன.

13. மத்திய பிரதேசத்தில் சல்மான் என்ற முஸ்லீம் ஆண் தன்னை உமேஷ் என்று போலியாக அடையாளப்படுத்திக் கொண்டு ஒரு இந்தப் பெண்ணை திருமணம் செய்து ஏமாற்றி, பிறகு அவரை தொந்தரவு செய்து, இஸ்லாமிற்கு மதம் மாறும்படி கட்டாயப்படுத்தி வந்தான். அந்தப் பெண்ணின் கூற்றின்படி சல்மான் அவர்களுடைய குழந்தையை கூட கொலை செய்ய முயற்சி செய்தான்.

பங்களாதேஷ்:

14. ஹிந்து தொழிலதிபர் அருண்குமார் ஷர்மாவை முகமது அப்துல் ரஷீத் மற்றும் ரஹ்மான் ஆகியோர் பங்களாதேஷின் நாட்டார் மாவட்டத்தில் கொடூரமாக கொலை செய்தனர்.

15. பங்களாதேசின் காசிப்பூர் மாவட்டத்தில் இந்து பெண் ரஜினி சந்திராவை உள்ளூர் முஸ்லிம் குண்டர்கள் முகமது ஷேக் மற்றும் ஹாசன் ஆகியோர் கொலை செய்ய முயற்சித்தனர்.

16. பங்களாதேஷின் டகூடன் மாவட்டத்தில் ஒரு ஹிந்து பெண் சப்னா கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

15. பங்களாதேஷின் பிரம்மன்பாரிய மாவட்டத்தில் உள்ள ஒரு இந்து குடும்பத்தின் நிலம் மற்றும் சொத்து முகமது பிலால் மியா என்பவனால் அதிகரிக்கப்பட்டது.

16. பங்களாதேஷின் தகுர்கான் மாவட்டத்தில் ஒரு முஹம்மத் ஹாலின் தலைமையிலான முஸ்லீம் கும்பல் மற்றொரு இந்து குடும்பத்தின் நிலத்தை அபகரித்தது.

17. பங்களாதேஷின் டாக்கா மாவட்டத்தில் முகம்மது சயதுர், பாரஹாட் ஆகியோரின் தலைமையிலான ஒரு உள்ளூர் கும்பலால் ஒரு இந்து குடும்பம் தாக்கப்பட்டது. சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

18. பங்களாதேஷின் டினாஜ்பூர் மாவட்டத்தில் ஒரு ஹிந்து பெண் மினாராவை முஹம்மது புபுள் என்பவன் கடத்திச்சென்று இஸ்லாமிற்கு கட்டாயமாக மதம் மாற்றினான்.

19. பங்களாதேஷின் பிரம்மன்பாரிய மாவட்டத்தில் ஏழை முஸ்லிம்களுக்கு பிரித்து வழங்குவதற்காக என்று இந்துக்களின் நிலங்கள் உள்ளூர் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டது.

20. தீப் கோஷ் என்ற ஹிந்து பெண், பங்களாதேஷின் பாரிசால் மாவட்டத்தில் முகமது ரியாத் என்பவனால் கொலை செய்யப்பட்டார்.

21.பங்களாதேஷின் பிரம்மன் பாரியா மாவட்டத்தில் ஒரு ஹிந்து குடும்பத்தின் நிலத்தை முகமது சாமியா என்பவன் ஆக்கிரமித்து அதில் இரண்டு வீடுகள் கட்டியுள்ளான்.

22. பங்களாதேஷின் டினாஜ்புர் மாவட்டத்தில் கோவில் நிலங்கள் முகமது குசர் என்பவனின் தலைமையில் அபகரிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான்

23. பாகிஸ்தானின் சிந்துவில், பீல் இந்து சமூகத்தின் வீடுகள் அரசாங்கத்தால் இடிக்கப்பட்டன. சமூக ஊடங்களில் செய்தி பரவி சமூக ஆர்வலர்கள் அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுத்ததும் இடிப்பு நிறுத்தப்பட்டது. ஆனால் சில நாட்களுக்குப் பிறகு உள்ளூர் முஸ்லிம்கள், இந்துக்களை விரட்டி விரட்டி தாக்கினர். இதில் ஹிந்து ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.

மற்ற நாடுகளில்

பயங்கரவாதம் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக பங்களாதேஷ் நபர் ஒருவர் இந்த மாத தொடக்கத்தில் சிங்கப்பூரில் கைது செய்யப்பட்டார். பங்களாதேஷில் உள்ள இந்துக்களின் மீது தாக்குதல் நடத்துவதற்காகவும், அவரது மதத்திற்கு ஆதரவாக ஆயுத வன்முறை செயல்களை செய்ய விரும்புவதாகவும் கண்டறியப்பட்டு நவம்பர் இரண்டாம் தேதி கைது செய்யப்பட்டான்.

பெரும்பாலான இந்து மத வெறுப்பு குற்றங்கள் சில மத போதனைகள் மற்றும் அரசியல் சித்தாந்தங்களில் ஹிந்து விரோத மதவெறியால் நடத்தப்படுகின்றன. இஸ்லாமிய நாடுகளில் ஹிந்து விரோத வெறுப்பு வெளிப்படையானது என்றாலும், ஹிந்து போபியா மற்றும் வெறுப்பு குற்றங்களுக்கு சூழலை மதசார்பற்ற நாடுகளும் வழங்குகின்றன.

Credit: The Hindu Post.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News