"அண்ணாமலை ஹவ் ஆர் யூ?" - கட்டியணைத்து விசாரித்த பிரதமர் மோடி, எட்டி நின்று வேடிக்கை பார்த்த தி.மு.க'வினர்
பிரதமர் மோடியின் சென்னை விஜயத்தின்போது அண்ணாமலை அவர்களை பாசத்துடன் கட்டியணைத்து விசாரித்துள்ளார்.
![அண்ணாமலை ஹவ் ஆர் யூ? - கட்டியணைத்து விசாரித்த பிரதமர் மோடி, எட்டி நின்று வேடிக்கை பார்த்த தி.மு.கவினர் அண்ணாமலை ஹவ் ஆர் யூ? - கட்டியணைத்து விசாரித்த பிரதமர் மோடி, எட்டி நின்று வேடிக்கை பார்த்த தி.மு.கவினர்](https://kathir.news/h-upload/2022/05/27/1365296-whatsapp-image-2022-05-27-at-10510-pm.webp)
பிரதமர் மோடியின் சென்னை விஜயத்தின்போது அண்ணாமலை அவர்களை பாசத்துடன் கட்டியணைத்து விசாரித்துள்ளார்.
தமிழக மக்களுக்கு 31,400 கோடி ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக பிரதமர் மோடி நேற்று மாலை சென்னை வந்திருந்தார், அப்போது நேரு உள்விளையாட்டு அரங்கில் அவருக்காக விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நேற்று மாலை சென்னை வந்திருந்த பாரதப் பிரதமர் மோடியை வரவேற்க சென்ற அண்ணாமலையை தோளோடு தோளாக கட்டியணைத்து அண்ணாமலை ஹவ் ஆர் யூ? எனப் பாசத்துடன் நலம் விசாரித்தார்.
அதன் பிறகு அண்ணாமலையும் அவருக்கு பதில் அளித்து பேசினார் இருவரும் சிறிது நேரம் உரையாடினார்கள் பின்பு தமிழக பா.ஜ.க'வின் முக்கிய நிர்வாகிகளை பிரதமர் மோடிக்கு அண்ணாமலை அறிமுகம் செய்து வைத்தார்.
மேலும் அண்ணாமலை தலைவராக பொறுப்பேற்ற பிறகு தமிழகம் முதன் முறையாக வருகிறார் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக தமிழக பா.ஜ.க சார்பில் கோலாகல வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, இதனை பார்த்து பிரதமர் மோடி மகிழ்ச்சி அடைந்தார். புதிய கல்விக் கொள்கையால் தமிழக இளைஞர்கள் பயன்பெறுவார்கள் என பிரதமர் மோடி பேசியுள்ளார்.