Kathir News
Begin typing your search above and press return to search.

'ஆப்பிரிக்காவிற்கான புதிய போராட்டம்'- களத்தில் இந்தியா- சீனா.!

ஆப்பிரிக்காவிற்கான புதிய போராட்டம்-  களத்தில் இந்தியா- சீனா.!

Saffron MomBy : Saffron Mom

  |  12 March 2021 1:30 AM GMT

ஆப்பிரிக்காவில், ஆசியாவின் வளர்ந்து வரும் பொருளாதார திட்டங்கள் ஒரு குறிப்பிடத்தக்க விஷயமாக மாறி வருகிறது. ஆசிய நாடுகள் ஆப்பிரிக்காவில் செல்வாக்கு காட்ட போட்டி போடுவது, 'ஆப்பிரிக்காவிற்கான புதிய போராட்டம்' என்று அழைக்கப்படுகிறது.

முக்கியமான அனைத்து ஆசிய நாடுகளும் ஏற்கனவே ஆப்பிரிக்காவுடன் நீண்ட கால உறவுகளை ஏற்படுத்தி இருக்கின்றன. 2000களுக்கு பிறகு ஆசியாவிற்கும் ஆப்பிரிக்காவுக்கும் இடையிலான பொருளாதார உறவுகள் கணிசமாக வளர்ந்துள்ளன.

இதில் முக்கியமான நாடு சீனா. 2000 முதல் சீன வர்த்தகம் முதலீடு மற்றும் ஆப்பிரிக்காவிற்கான அதிகாரப்பூர்வ நிதி ஆகியவை கணிசமாக வளர்ந்தது.

2000 மற்றும் 2013 க்கு இடையில் துணை சஹாரா ஆப்பிரிக்கா உடனான சீன வர்த்தகம் 4.1 மில்லியன் அமெரிக்க டாலரில் இருந்து 66 6.8 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்தது.

கச்சா எண்ணெய் மற்றும் ஏற்றுமதியில் அதிக வளர்ச்சி தான் இந்த அதிகரிப்புக்கு காரணமாக இருந்தது. சீன உற்பத்தி இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களின் ஆப்பிரிக்க இறக்குமதிகள் இந்த காலகட்டத்தில் வேகமாக வளர்ந்தன. சீன முதலீடு, (தனியார் துறை உட்பட) ஆப்பிரிக்காவில் வளர்ந்துள்ளது.

இதில் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சம் இதுவரை இல்லாத வகையில் சீனாவின் EXIM வங்கி அதிகாரபூர்வமாக ஆப்பிரிக்க வளங்களுக்கு ஈடாக உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு சலுகையில் கடன்களை வழங்குகின்றன. ஆப்பிரிக்காவில் சீனாவினால் மிக முக்கியமான உள்கட்டமைப்பு உருவானது. இது மேற்கத்திய நாடுகளால் பாரம்பரியமாக புறக்கணிக்கப்பட்ட ஒரு பகுதி.

இந்தநிலையில் ஆப்பிரிக்கா உடனான இந்திய பொருளாதார உறவுகளும் 2000களில் வேகமாக விரிவடைந்தது.

ஆரம்பத்தில் இந்தியா-சீனா என பத்திரிகைகளில் சேர்த்து குறிப்பிடப்பட்டாலும், ஆப்பிரிக்காவுடனான சீன உறவு இந்தியாவுடனான ஆப்பிரிக்க உறவிலிருந்து கணிசமாக வேறுபட்டது என்பது விரைவில் தெளிவாகியது.

ஆப்பிரிக்காவுடனான இந்தியாவின் உறவுகள், பிரிட்டிஷ் காலனித்துவத்திற்கு இருநாடுகளும் அடிமையாக இருந்ததால் அதனால் இருந்த ஒற்றுமை மற்றும் ஆபிரிக்க நாடுகளின் இறையாண்மைக்கான மரியாதை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டிருந்தன.

ஆப்பிரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தகமும் 2000களில் நடுப்பகுதியிலிருந்து வேகமாக வளர்ந்தது. ஆப்பிரிக்காவில் காண இந்திய ஏற்றுமதிகள் 2004இல் 5.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் இலிருந்து 2014ல் 28.4 பில்லியன் அமெரிக்க டாலர்களாக ஐந்து மடங்கு அதிகரித்தன. ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியாவின் இறக்குமதி 2004இல் 2.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் இலிருந்து 2014இல் 23.52 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது.

இந்தியா ஆப்பிரிக்காவில் ஒரு முன்னணி முதலீட்டாளராக மாறியது. இந்தியா தற்போது ஆப்பிரிக்காவில் ஏழாவது பெரிய முதலீடாக உள்ளது.

ஆப்பிரிக்காவுடனான இந்தியாவின் வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்பின் அளவும் நோக்கமும் வேகமாக வளர்ந்து வந்தது. 2003ஆம் ஆண்டில் இந்தியா, இந்திய முன்னேற்றம் மற்றும் பொருளாதார உதவி IDEB என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

ஆப்பிரிக்க நாடுகளின் முன்னேற்ற திட்டங்களை இந்த கடன் திட்டத்தின் மூலம் ஆதரிக்கத் தொடங்கியது. இந்தியா தற்பொழுது ஆப்பிரிக்காவில் 77 திட்டங்களை மொத்தம் 12.85 பில்லியன் அமெரிக்க டாலர் கொண்டு நிறைவேற்றி வருகிறது.

இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு மூலம் இந்தியா பல தலைமுறை ஆப்பிரிக்க அதிகாரிகளுக்கு பயிற்சி அளித்துள்ளது. ஆப்பிரிக்க மாணவர்களுக்கு உதவித்தொகை பெறும் திட்டம் மற்றும் பல டிஜிட்டல் முயற்சிகள் மூலம் பயிற்சி அளிக்க உறுதி கொண்டுள்ளது.

ஆப்பிரிக்காவில் உள்ள இங்கிலாந்து, ஜப்பான் போன்ற நாடுகளுடனும் இந்தியா கூட்டு சேர்ந்துள்ளது. ஆசியா ஆப்பிரிக்கா வளர்ச்சி தாழ்வாரம் 2017இல் தொடங்கப்பட்டது. இது ஆசியாவுக்கும் ஆப்பிரிக்காவுக்கும் இடையிலான வளர்ச்சியையும் இரண்டு கண்டங்களுக்கு இடையிலான தொடர்பை மேம்படுத்தவும் இந்தியாவிற்கும் ஜப்பானுக்கும் இடையிலான ஒரு லட்சிய திட்டமாகும்.

2000கள் ஆப்பிரிக்காவில் பொருளாதார மாற்றத்திற்கு வழிவகுத்த ஆண்டுகளாகும். எத்தியோப்பியா அங்கோலா போன்ற பல ஆப்பிரிக்க நாடுகள் சீன பொருட்களின் தேவை அதிகரிப்பின் பின்னணியில் நிறைய பொருளாதார வளர்ச்சியைக் கண்டன.

முன்னேற்றவே முடியாத ஒரு சிக்கலான கண்டம் ஆப்பிரிக்கா என்று அதுவரை நினைத்துக் கொண்டிருந்த உலகத்தின் பார்வையும் மாறியது. ஆப்பிரிக்கா வளர்ந்த கதை பிரபலமானது. பல ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் அவற்றின் உயர் பொருளாதார வளர்ச்சி மற்றும் வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கத்தின் காரணமாக ஆப்பிரிக்கா முக்கியமான முதலீடு இடங்களாக மாறியது.

இதனால் ஆப்பிரிக்காவில் ஆசிய நாடுகளின் பொருளாதாரம் அதிகரித்து மேலை நாடுகளின் முக்கியத்துவம் குறைந்து விட்டது. 2004ஆம் ஆண்டில் அமெரிக்க ஏற்றுமதியை விட சீனாவிலிருந்து இறக்குமதி அதிகரித்தது.

2013 ஆவது வாக்கில் ஆப்பிரிக்காவில் இருந்து அதன் இறக்குமதி அமெரிக்காவிற்கு ஆப்பிரிக்க ஏற்றுமதியை விட அதிகமாக இருந்தது. ஐரோப்பிய ஒன்றியம் ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய பொருளாதார கூட்டாளியாக தொடர்ந்து இருந்தாலும் அதன் முக்கியத்துவம் பல ஆண்டுகளாக கணிசமாக குறைந்துள்ளது.

ஏனெனில் மேலை நாடுகளை போல் இல்லாமல் ஆசிய நாடுகள் கடுமையான நிபந்தனைகளை விதிக்கவில்லை. ஆப்பிரிக்க இறையாண்மையை மதிக்கின்றன மற்றும் மேம்பாட்டு திட்டங்களுக்கு தேவையான ஆதரவை வழங்குகின்றன.

2000 களின் முற்பகுதியில் சர்வதேச நிதி நிறுவனங்களிடம் இருந்து கடன் பெற தவறிய அங்கோலா மற்றும் காங்கோ ஜனநாயக குடியரசு போன்ற நாடுகளுக்கு உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான சீனாவின் கடன்கள் ஒரு பெரிய வரப்பிரசாதமாக கருதப்பட்டன.

ஆனால் இந்த கொரானா வைரஸ் தொற்று பல ஆப்பிரிக்க நாடுகளின் அதிர்ஷ்டத்தை மாற்றி அமைத்துள்ளது. அவை இப்போது கடனிலும் நிச்சயமற்ற எதிர்காலத்திலும் உள்ளன. அமெரிக்காவுடனான சீன அணுகு முறையின் குறைகள் சமீபத்திய ஆண்டுகளில் அதிகம் காணப்படுகின்றன. பல விமர்சகர்கள் சீனா, ஆப்பிரிக்காவை கடனில் சிக்கவைக்கும் ராஜதந்திரத்தை பின்பற்றுவதாக குற்றம் சாட்டியுள்ளன.

மேலும் சீன திட்டங்களில் மோசமான வேலைவாய்ப்பு உருவாக்கம், அங்கிருக்கும் உள்ளூர் சட்டங்களுக்கு மரியாதை கொடுக்காதது, சீன கட்டுமானத்தில் உருவாக்கப்பட்ட ஒரு கட்டமைப்பின் தரம் மற்றும் சீன எதிர்ப்பு உணர்வுகள் பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகளில் அதிகரித்து வருகின்றன.

சீனாவின் நிதியை சுற்றியுள்ள உற்சாகம் குறைந்து விட்டாலும் சீனா ஆப்பிரிக்காவின் நிதி விவகாரங்களில் ஒரு குறிப்பிடத்தக்க அங்கமாகத்தான் தொடரும். இதன் விளைவாக ஐரோப்பா தான் ஆப்பிரிக்காவை நோக்கி தனது அணுகுமுறையை மாற்றியமைக்க வேண்டும்.

ஆப்பிரிக்காவில் கடந்த 20 ஆண்டுகளாக ஏற்படும் உயர்ந்த வளர்ச்சியானது வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் வறுமையை ஒழிப்பு ஆகியவற்றுக்காக இல்லை எனவே ஆப்பிரிக்க நாடுகளுக்கு பெரும் சவால்களாக வேலையின்மை, குழந்தை இறப்பு, வறுமை ஆகியவை தொடர்கிறது.

காலநிலை மாற்றங்கள் மற்றும் கடன் துயரங்கள் வரவிருக்கும் ஆண்டுகளில் ஆப்பிரிக்காவின் நிலைமையை இன்னும் மோசமாக்கும்.

எனவே ஆப்பிரிக்காவின் முன்னேற்றத்தின் கூட்டாளிகள் பருவநிலையை தழுவி ஆப்பிரிக்காவின் நிலையான முன்னேற்றத்தை அடைவது எப்படி என்பதில் கவனம் செலுத்த வேண்டும். ஆப்பிரிக்காவில் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கு மூன்றாம் நாடுகளுடன் 'முக்கோண கூட்டு' போன்ற புதிய முறைகளையும் இது ஆராய வேண்டும்.


Reference: ORF

Cover Image Credit: ORF



Next Story
கதிர் தொகுப்பு
Trending News