Kathir News
Begin typing your search above and press return to search.

மகத்தான மருந்தான முருங்கை இலை டீ பற்றி ருசிகரமான தகவல்கள்.!

மகத்தான மருந்தான முருங்கை இலை டீ பற்றி ருசிகரமான தகவல்கள்.!

மகத்தான மருந்தான முருங்கை இலை டீ பற்றி ருசிகரமான தகவல்கள்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  20 Oct 2020 7:18 AM GMT

முருங்கைக் கீரையில் உடலுக்கு தேவையான மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் ஏராளம் இருக்கின்றன. இது மோரிங்கா தேநீர் என்றும் அழைக்கப்படுகிறது. இதில் சாதாரணமாக கீரையில் இருப்பதை விட மூன்று மடங்கு இரும்பு சத்து நிறைந்திருக்கிறது. அதுபோல் கால்சியம், பொட்டாசியம், விட்டமின், b6 மற்றும் மெக்னீசியம், பீட்டா கரோட்டின் ஆகியவை இருக்கின்றன. தினமும் ஒரு கப் டீ குடித்தால் உடல் எடை, ரத்த அழுத்தம் குறையும். உடலில் உள்ள அனைத்து நச்சுக்களும் வலு பெறும் மற்றும் நச்சுக்கள் வெளியேறும்.



மேலும் முருங்கைக்கீரையில் ஆன்டி ஆக்சிடென்ட்கள் அதிகம் நிறைந்துள்ளன. இவை உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டவை. முருங்கைக் கீரையில் இருக்கும் புரதம் தலை மற்றும் கூந்தலுக்கு நீர் சக்தியை தருகிறது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க உதவும். இதனால் சர்க்கரை நோயாளிகள் இதை தாராளமாக பருகலாம்.



மன அழுத்தம், மனச்சோர்வு, பதற்றம் போன்ற மனநிலை சார்ந்த பிரச்சினைகளுக்கு ஆளாகுபவர்கள் டீ குடிப்பதினால் அவர்களுக்கு அதிக நன்மை கிடைக்கும். இது மனதுக்கு தேவையான ஆற்றலை வழங்கி சோர்வையும் விரட்டும். முருங்கை இலை நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்டது. நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கும் தன்மையும் அதற்கு இருக்கிறது. பாக்டீரியா பூஞ்சை போன்றவை திறம்பட எதிர்த்து போராடும் தன்மை கொண்டவை இந்த டீ பருகுவதன் மூலம் வாய்வழி நோய் தொற்றுகளில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம். காலையிலோ அல்லது மாலையிலோ ஒரு வேளையாவது மோரிங்கா தேநீர் பருகலாம்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News