Kathir News
Begin typing your search above and press return to search.

St. Joseph குழந்தைகள் இல்லம். வெளிநாட்டு நிதிகளை பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Children's home accused by LRO of illegal activities.

St. Joseph குழந்தைகள் இல்லம். வெளிநாட்டு நிதிகளை பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Saffron MomBy : Saffron Mom

  |  4 Aug 2021 4:57 PM GMT

இந்தியாவில் உள்ள தங்கள் கூட்டாளிகளின் உதவியுடன் வெறித்தனமாக செயல்படும் சுவிசேஷ மிஷனரிகளின் (Evangelist Missionaries) உலகளாவிய நெட்வொர்க், மோசடி, கட்டாயப்படுத்துதல், கவர்ச்சி மற்றும் வற்புறுத்தல் மூலம் கிறிஸ்தவத்திற்கு மக்களை சட்டவிரோதமாக மாற்றுவதற்கு வெளிநாட்டு நிதிகளை வெட்கமின்றி பயன்படுத்துகிறது.

FCRA விதிமீறல்கள் மற்றும் வெளிநாட்டு நிதி சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்படுவதைக் கண்காணிக்கும் சட்ட உரிமைகள் ஆய்வகம் (LRO), கேரளாவை சேர்ந்த செயின்ட் ஜோசப் குழந்தைகள் இல்லம் (St Josephs Children Home), மதமாற்று சக்திகளிடமிருந்து நன்கொடை பெற்று குழந்தைகளை குறி வைத்து மத மாற்றம் செய்வதாக குற்றம் சாட்டியுள்ளது.



சமீபத்தில் இத்தகைய நடவடிக்கைகளுக்காக 1.60 கோடி ருபாய் நன்கொடை பெற்றதை சுட்டிக்காட்டியுள்ள LRO, இவ்வில்லத்தின் நடவடிக்கைகளை குறித்து ஆராய்ந்த போது, சிறார் நீதி (குழந்தைகள் பாதுகாப்பு) சட்டத்தின் விதிமுறைகள் பல மீறப்பட்டிருப்பதையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.

இது தொடர்பாக விசாரணை கோரி உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளதாக LRO குறிப்பிட்டுள்ளது. உள்துறை அமைச்சகத்திற்கு LRO அளித்த புகார் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட்டு, தீவிரமான FCRA மீறல்களை மட்டுமல்லாமல், தேசிய பாதுகாப்பு பாதிப்புகளையும் பற்றி அக்கறையுடன் விசாரிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Image Courtesy: LRO

Next Story
கதிர் தொகுப்பு
Trending News