Kathir News
Begin typing your search above and press return to search.

ஈ.வே.ராம்சாமியின் சாதி வெறியை அம்பலப்படுத்திய தி,மு.க அமைச்சர் துரைமுருகன்

தி.மு.க'வின் முப்பெரும் விழாவில் துரைமுருகன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஈ.வே.ராம்சாமியின் சாதி வெறியை அம்பலப்படுத்திய தி,மு.க அமைச்சர் துரைமுருகன்
X

Mohan RajBy : Mohan Raj

  |  19 Sept 2022 5:21 PM IST

தி.மு.க'வின் முப்பெரும் விழாவில் துரைமுருகன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


சமீபகாலமாக தி.மு.க'வினர் பேசுவது அதிக சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது, அந்த வகையில் தி.மு.க'வின் முப்பெரும் விழாவில் தி.மு.க'வின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் பேசியது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.


அந்த விழாவில் பேசிய துரைமுருகன் கூறியதாவது, 'ஒருமுறை என்னை ஈ.வே.ரா பக்கத்தில் அமரும்படி செய்தனர் அப்பொழுது நானும் அவரது பக்கத்தில் அமர்ந்தேன். அப்பொழுது அவர் கேட்டார், 'உனது பெயர் என்ன? எந்த ஊர் என கேட்டார், நான் எனது பெயர் ஊர் சொன்னேன் எந்த ஜாதி என்ன என கேட்டார் நான் சொன்னேன் அப்பொழுது சொன்னார் 'நீயும் பறையன் மாதிரிதான்' என ஈ.வே.ரா கூறினார், என துரைமுருகன் கூறியது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.


ஈ.வே.ரா ஜாதியை ஒழித்தார், ஈ.வே.ரா'வால் தான் இருக்கும் ஜாதியை வெறியெல்லாம் அடங்கி விட்டது என்ற ரீதியில் தி.மு.க'வினர் பேசி வருகையில், 'நீயும் பறையன் மாதிரிதான்' என ஈ.வே.ரா கூறியதாக தி.மு.க அமைச்சர் துரைமுருகன் கூறியது தற்பொழுது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


Source - Twitter

Next Story
கதிர் தொகுப்பு
Trending News