Kathir News
Begin typing your search above and press return to search.

முதல் குவாட் (QUAD) தலைவர்கள் மாநாடு: பாதுகாப்பைத் தாண்டி என்னவெல்லாம் விவாதிக்கப்பட்டது? - ஒரு விரிவான பார்வை!

முதல் குவாட் (QUAD) தலைவர்கள் மாநாடு: பாதுகாப்பைத் தாண்டி என்னவெல்லாம் விவாதிக்கப்பட்டது? - ஒரு விரிவான பார்வை!

Saffron MomBy : Saffron Mom

  |  18 March 2021 4:02 AM GMT

மார்ச் 12ந் தேதி அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா நாட்டுத் தலைவர்கள் கலந்து கொண்ட குவாட் (QUAD) கூட்டத்தில் கொரனா வைரஸ் தடுப்பூசி பற்றி மட்டுமல்லாமல், காலநிலை மாற்றம் மற்றும் முக்கிய வளர்ந்துவரும் தொழில்நுட்பங்கள் போன்றவை பற்றியும் விவாதிக்கப்பட்டது.

காணொளி வாயிலாக நடந்த QUAD சந்திப்பின்போது முதலில், கொரானா வைரஸ் தொற்றுநோயை கையாள்வதற்கு உறுப்பு நாடுகளிடையே ஒத்துழைப்பின் தேவை மற்றும் திறந்த சுதந்திரமான இந்தோ-பசுபிக் பிராந்தியத்தையும் உறுதி செய்வதன் அவசியத்தையும், QUAD தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தற்போதைய அமெரிக்க நிர்வாகம் பொதுவாக உள்நாட்டிலும் வெளியுறவுக் கொள்கையிலும் சிக்கல்களைக் கொண்டிருக்கும். அதில் இந்தோ-பசுபிக் கருத்தும் ஒன்று.

மூத்த அமெரிக்க அதிகாரியாக இருந்து ஜனாதிபதி பதவிக்கு வந்த ஜோ பிடன்," அமெரிக்க நிர்வாகம் QUAD சந்திப்பை அத்தியாவசியம் மற்றும் முக்கியமானதாக கருதுகிறது" என்று கூறியுள்ளார்.

மேலும், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் டோனி பிளிங்கன், பாதுகாப்பு செயலாளர் லாயிட் விரைவில் இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பானில் உள்ள தங்கள் நண்பர்களுடன் தொலைபேசியில் உரையாடல் நடத்துவர் என்றும் அந்த உரையாடலில் திறந்த மற்றும் சுதந்திரமான இந்தோ-பசுபிக் விவகாரம் முக்கியமானதாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

QUADன் அமைச்சர்கள் மட்டக் கூட்டம் பிடன் நிர்வாகத்தின் கீழ் முதன்முதலில் 20 பிப்ரவரி 2021 அன்று நடைபெற்றது, அங்கு வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன், ஆஸ்திரேலிய வெளியுறவு மந்திரி மரைஸ் பெய்ன் மற்றும் ஜப்பானின் தோஷிமிட்சு மொடேகி ஆகியோர் தங்களது பொதுவான பார்வையை ஒரு சுதந்திரமான, திறந்த வெளியில் மீண்டும் வலியுறுத்தினர் ,

QUAD தலைவர்கள் கூட்டத்தில், சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் பாரம்பரியத்தை உறுதி செய்ய அமெரிக்கா முதலிலிருந்தே முயற்சி செய்து வருவதை தெளிவாக காணலாம்.

QUAD சந்திப்பு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை அடைந்துள்ளது. அதாவது, ஒரு வரலாற்று சாதனையை புரிந்துள்ளது. 2004 சுனாமியின் பின்னர் 2007 இல் நடந்த முதல் QUAD கூட்டம் நான்கு நாடுகளின் அதிகாரிகளின் தற்காலிக குழுவாக தொடங்கியது.

2017இல் குவாட் கூட்டு செயலாளர்களின் மட்டத்தில் ஒரு மூத்த அதிகாரிகள் கூட்டமாகவும் தொடர்ந்தது. மேலும் இந்த குழு வரவிருக்கும் ஆண்டுகளில் முன்னேறும் என்பதில் சந்தேகம் இருந்தது.

இந்த சந்திப்பில் தலைவர்களின் கூட்டு அறிக்கையான- "தி ஸ்பிரிட் ஆஃப் தி க்வாட்)" வெளியிடப்பட்டது. இந்தக் குவாட் கூட்டத்தில் அமெரிக்கா, ஜப்பான், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகளும் தனித்தனியே அறிக்கைகளை வெளியிட்டன.இவ்வாறு தனித்தனியே அறிக்கைகளை வெளியிடுவது இதுவே முதல் முறையாகும். குவாட் பற்றிய செய்திகள் எப்பொழுதும் அதிக விமர்சனங்களை பெறுகின்ற ஒன்றாக உள்ளது.

இந்த குவாட் படிப்படியாக வளர்ந்து இப்பொழுது ஒரு நல்ல உயர்ந்த நிலையை அடைந்துள்ளது.ஆயினும், இந்தோ பசிபிக் பகுதியில் உள்ள சிக்கல்களும் பிரச்சினைகளும் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்த சர்ச்சைக்குரிய பகுதியை ஒரு தனிக்குழு அமைத்து ஆராய்ந்து பார்ப்பது முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.

தெற்கு மற்றும் கிழக்கு சீனக்கடல் கரைகளில் சீனாவின் ஆக்கிரமிப்பு மற்றும் விதிமுறைகளை மீறி உலக ஒழுங்கை கெடுக்கும் சீனாவைப் பற்றியும் பாதுகாப்பு தேவைப்படும் இந்தோ பசிபிக் பகுதியை பற்றியும் விவாதித்தது இந்தக் கூட்டத்தின் ஒரு அம்சமாகும். மேலும், ஆஸ்திரேலியா கடந்த ஆண்டு ஒரு பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்கி உள்ளது.

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், சீன நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள கடல் பிரச்சனை,வடகொரிய நாட்டின் அணுசக்தி பிரச்சினை மற்றும் மியான்மரில் நிலவும் நெருக்கடி போன்றவை பற்றி விவாதித்தார்.

இந்த முதல் குவாட் கூட்டத்தின்போது இந்தியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நான்கு நாடுகளும் சீனா செய்த சவால் பற்றி விவாதித்தனர். இந்தக் கூட்டத்தில் உலகில் முக்கியமான பிரச்சனைகளான கொரானா வைரஸ் பரவல், இணைய அச்சுறுத்தல்கள், வேண்டும் என்பதைப் பற்றியும் விவாதிக்கப்பட்டது.

குவாட் கூட்டத்தின் எதிரொலியாக 2022ஆம் ஆண்டு இந்தோ பசுபிக் பகுதி முழுவதும் ஒரு பில்லியன் டோஸ் covid-19 தடுப்பூசிகளை வழங்குவதாகவும் அதற்காக 600 பில்லியன் டாலர்களை செலவிடப் போவதாகவும் அமெரிக்கா ஆஸ்திரேலியா ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நான்கு நாட்களும் உறுதி அளித்துள்ளது. இச்செயல் சீன நாட்டிற்கு எதிரான ஒரு முயற்சி என பரவலாக அனைவராலும் பேசப்படுகிறது.

யுனிசெஃப் தலைமையிலான உலக தடுப்பூசி இயக்கத்தில் COVAX அமைப்பு மற்றும் சுகாதார அமைப்பு (WHO) இணைந்து செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெளியுறவு துறை அமைச்சர் ஹர்ஷ் ஸ்ரிங்லா வெளியிட்ட அறிக்கையில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய 4 நாடுகளும் இந்தோ பசிபிக் பகுதியில் covid-19 தடுப்பு ஊசி தயாரிப்பை அதிகரிக்க தங்களது நிதி ஆதாரங்களையும் உற்பத்தித் திறனையும் செலவிடப் போவதாக தெரிகிறது.

இந்த நான்கு நாடுகளும் தங்கள் நாடுகளில் உள்ள சிறந்த விஞ்ஞானிகளை கொண்டு ஒரு "குவாட் விஞ்ஞானிகள் குழு" அமைத்து தடுப்பூசி தயாரிப்பு முடிவெடுத்துள்ளனர். மேலும், இந்த நான்கு நாடுகளும் தடுப்பூசிகளை தயாரிக்க மருத்துவக் கருவிகளை பகிர்ந்து பயன்படுத்தப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் கோவில் தடுப்பூசியைப் பற்றி மட்டும் இல்லாமல். இதைத்தவிர வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், காலநிலை மாற்றம் போன்றவை பற்றியும் விவாதம் நடைபெற்றுள்ளது. குவாட் கூட்டம் வளர்ந்து வரும் சிக்கலான தொழில்நுட்பங்களை பற்றி ஆராய ஒரு குழுவை நிறுவி உள்ளது.

இந்தக் குழு 5 ஜிபி மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற தொழில்நுட்பங்கள் வளர்ச்சிக்கு உதவி உள்ளது. இந்தக் குழுவில் வளர்ந்துவரும் தொழில்நுட்ப அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள உதவும் சைபர்ஸ்பேஸில் போன்ற யோசனைகள் பற்றியும் குவாட் கூட்டத்தில் தெரிவித்துள்ளது.

டிரம்ப் நிர்வாகத்தால் ஏற்பட்ட சிக்கல்களை அமெரிக்கா சரிசெய்ய முயற்சிக்கும் ஒரு தளமாக இந்தக் கூட்டம் பார்க்கப்படுகிறது. உலக நாடுகள் சுகாதார அமைப்பிடம் (WHO) இருந்து அமெரிக்கா ஆதரவை திரும்பப் பெற முயற்சிப்பது ட்ரம்ப் நிர்வாகத்தால் ஏற்பட்ட சிக்கல்களை சரிசெய்ய முயலும் செயல்களில் ஒன்றாக தெரிகிறது. " தி ஸ்பிரிட் ஆஃப் குவாட்" அறிக்கையின் மூலம் அமெரிக்கா உலக நாடுகள் சுகாதார (WHO) மற்றும் COVAX அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து செயல்புரிய முயற்சிபது வெளிப்படுகிறது.

குவாட் குழுவின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் சீன நாட்டிற்கு எதிராக உள்ளது போலவே காணப்படுகிறது. குவாட் குழு சீன நாட்டைப் பற்றியோ அந்நாட்டின் வளர்ச்சி பற்றியோ உரையாடுவதை தவிர்த்துவிட்டு பாதுகாப்பு தேவைப்படும் இந்தோ பசிபிக் போன்ற பகுதிகள் பற்றி ஆலோசிக்க வேண்டும்.

இப்பொழுது குவாட், அமெரிக்க அதிபர் ஜோ பிடன் தலைமையிலான நான்கு ஜனநாயக நாடுகள் ( இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான்) சேர்ந்த ஒரு குழுவாக உள்ளது. இந்த குவாட் குழு சரியான திசையை நோக்கிய முதல் படியாகும். ஏனெனில், இது உலக நாடுகளின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியை பற்றி விவாதிக்கும் ஒரு குழுவாகும்.

Reference: ORF

Next Story
கதிர் தொகுப்பு
Trending News