Kathir News
Begin typing your search above and press return to search.

உக்ரைன் மீதான போர்: எந்த அளவு நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது இந்தியா?

உக்ரைன் மீதான போர்: எந்த அளவு நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது இந்தியா?

Bharathi LathaBy : Bharathi Latha

  |  25 Feb 2022 12:30 AM GMT

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உக்ரைனில் இராணுவ நடவடிக்கைக்கு வியாழக்கிழமை காலையில் உத்தரவிட்டார். சிறிது நேரத்திற்குப் பிறகு, கிழக்கு உக்ரைனில் உள்ள கீவ் மற்றும் கார்கிவ் உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த வெடிச் சத்தம் கேட்டது. உக்ரைனில் விமானப் போக்குவரத்துகள் அனைத்தும் முழுமையாக பாதிக்கப்பட்டன. குறிப்பாக ரஷ்யாவின் துல்லியமாக தாக்கக்கூடிய ஆயுதங்கள் காரணமாக உக்ரைனன் பெரும்பாலான பகுதிகள் பாதிப்புக்குள்ளானது. இந்தத் தொடர்ச்சியான தாக்குதல் காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு நாடுகள் தன்னுடைய நிலைப்பாட்டை தெரிவித்து வருகின்றார்கள் அந்த வகையில் இந்தியா தன்னுடைய நிலைப்பாட்டை தற்போது தெரிவித்துள்ளது.


மேலும் இதுபற்றி ஐக்கிய நாட்டு சபையில் சுமுகமான பேச்சு வார்த்தைகள் மூலம் மட்டும் தான் இத்தகைய போரை தடுத்து நிறுத்த முடியும் என்றும் இந்தியா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக பல்வேறு பல்வேறு நாட்டின் பொருளாதாரம் தற்பொழுது பாதிப்புக்குள்ளாகி உள்ளது. 2014க்குப் பிறகு முதல் முறையாக எண்ணெய் விலை 100 டாலர்களைத் தாண்டியது. 'கவனமாக கையாளப் படவில்லை எனில் ரஷ்யா-உக்ரைன் பதட்டங்களுக்கு மத்தியில், இந்தியா உடனடியாக தீவிரத்தை குறைக்க அழைப்பு விடுக்கும் என்றும் கூறப்படுகிறது. உக்ரைனில் ரஷ்ய படையெடுப்பால் குறைந்தது 5 மில்லியன் மக்கள் இடம்பெயர்வார்கள் என்று அமெரிக்கா எச்சரிக்கிறது.


ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடின் உக்ரைனில் இராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கியதைத் தொடர்ந்து உலகளாவிய சந்தை வீழ்ச்சியடைந்தது. ரஷ்யா உக்ரைன் மீது ஏவுகணைகளை வீசியதால், டாலருக்கு எதிராக அதன் கரன்சி ரூபிள் 9% சரிந்தது. தொற்று நோய்களின் அச்சுறுத்தல் தொடர்ந்து உலக பொருளாதாரங்கள் மீண்டும் மீண்டு வந்த பின்னர் கூடிவரும் நேரத்தில், தற்பொழுது இந்த போரின் காரணமாக கோதுமை மற்றும் உலோகங்கள் போன்ற முக்கிய பொருட்களின் விநியோகம் தொடர்பான கவலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை நோய் தொற்று மக்களை கவலைக்கு உள்ளாக்கி வந்த நிலையில் போதும் கூட மனிதர்களையும் இத்தகைய ஒரு சூழ்நிலைக்கு தள்ளப்படும் நிலைமை வந்துள்ளது.


முன்னதாக, கிழக்கு உக்ரைனில் உள்ள கிளர்ச்சித் தலைவர்கள் கியேவுக்கு எதிரான இராணுவ உதவியை மாஸ்கோவிடம் கேட்டதாக கிரெம்ளின் தெரிவித்தது. இந்த வாரம் உக்ரைனில் இருந்து பிரிந்து சென்ற இரண்டு பகுதிகளை ரஷ்யா அங்கீகரித்ததைத் தொடர்ந்து, "அமைதிகாப்பாளர்களை" வழங்குவதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து, அமெரிக்க அதிகாரிகள் ரஷ்ய ஊடுருவல் குறித்து எச்சரித்தனர். மேலும் இதுபற்றி இந்தியா "ஆழ்ந்த கவலையை" வெளிப்படுத்தியுள்ளது மற்றும் ஐக்கிய நாடுகள் சபையில் விரோதத்தை குறைக்க அழைப்பு விடுத்துள்ளது. இது சரிபார்க்கப்படாவிட்டால், அது பிராந்தியத்தை கடுமையாக சீர்குலைக்கும் ஒரு பெரிய நெருக்கடியில் சுழலும் என்று கூறியுள்ளது.


ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி கூறுகையில், "உடனடியாக தீவிரத்தைத் தணிக்க நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம். மேலும் நிலைமையை மோசமாக்குவதற்கு பங்களிக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் தவிர்க்க வேண்டும்" என்றார். இதற்கிடையில், இந்தியா, "அனைத்து பக்கங்களிலும் கட்டுப்பாட்டை" வலியுறுத்தியுள்ளது. இந்த நேரத்தில் "பதட்டங்களைத் தணிப்பதே" முதன்மையான முன்னுரிமை என்பதை வலியுறுத்துகிறது. உக்ரைனில் வசிக்கும் இந்தியர்களைப் பொறுத்தவரை, இந்திய தூதரகம் தனது சமீபத்திய ஆலோசனையில், நிலைமை மிகவும் நிச்சயமற்றது என்றும், இந்திய குடிமக்கள் அமைதியாக இருக்க முயற்சி செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளது.

Input & Image courtesy:The Hindu

Next Story
கதிர் தொகுப்பு
Trending News