Kathir News
Begin typing your search above and press return to search.

வலைதளம் மூலம் போதை ஊசி - தமிழக இளைஞர்களை சீரழித்து வந்த கும்பல் சிக்கியது

வலைதளம் முழுவதும் நெட்ஒர்க் உருவாக்கி தமிழகம் முழுவதும் ஊக்க மருந்து விற்பனை செய்து வந்த போதை கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது.

வலைதளம் மூலம் போதை ஊசி - தமிழக இளைஞர்களை சீரழித்து வந்த கும்பல் சிக்கியது

Mohan RajBy : Mohan Raj

  |  25 Aug 2022 1:40 PM GMT

வலைதளம் முழுவதும் நெட்ஒர்க் உருவாக்கி தமிழகம் முழுவதும் ஊக்க மருந்து விற்பனை செய்து வந்த போதை கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது.



மதுரை, சென்னை, பூனே ஆகிய பகுதியில் உள்ள மருந்து நிறுவனங்களிடம் இருந்து ரகசிய குறியீட்டின் மூலம் ஊக்க மருந்தை கொள்முதல் செய்து தமிழக முழுவதும் விற்பனை செய்து வந்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

தேனி மாவட்டம் சின்னமனூரில் போதை ஊசி பயன்படுத்திய நான்கு இளைஞர்களும் போதை மருந்து வினியோகம் செய்த இன்ஜினியர் உட்பட்ட நாலு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணையில் மருத்துவரின் பரிந்துரையின் பெயரில் பயன்படுத்தக்கூடிய ஊக்க மருந்தை போதைக்காக ஊசி மூலமாக பயன்படுத்தி வந்ததாகவும் அதிக லாபத்திற்கு இளைஞர்களிடம் விற்பனை செய்ததும் தெரியவந்தது.

உடனே விசாரணையை துரிதப்படுத்திய காவல்துறையினர் இந்த நெட்வொர்க்கை கைது செய்துள்ளனர், இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Source - Polimer நியூஸ்

Next Story
கதிர் தொகுப்பு
Trending News