Kathir News
Begin typing your search above and press return to search.

எங்க பிள்ளையாரை நாங்க கும்பிடக்கூடாதா? வி.களத்தூர் விநாயகர் சதுர்த்தி விவகாரம்...! கொந்தளிப்பில் மக்கள்?

எங்க பிள்ளையாரை நாங்க கும்பிடக்கூடாதா? வி.களத்தூர் விநாயகர் சதுர்த்தி விவகாரம்...! கொந்தளிப்பில் மக்கள்?

Mohan RajBy : Mohan Raj

  |  20 Sep 2023 2:46 PM GMT

பெரம்பலூர் அருகே வி.களத்தூரில் விநாயகர் சிலை விவகாரம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது...!

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் வி.களத்தூர் கிராமத்தில் உரிய அனுமதி பெறாமல் வைக்கப்பட்டிருந்ததாக கூறி விநாயகர் சிலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர், ஆனால் அங்குள்ள மக்கள் 'நாங்கள் எங்கள் பண்டிகைக்காக விநாயர் சிலைகளை வைத்து வழிபடுகிறோம், இதனை நீங்கள் எப்படி எடுக்கலாம்' என அங்கிருக்கும் மக்கள் அனைவரும் போலீசாரிடம் கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.

இதனால் போலீசார் மற்றும் பொதுமக்கள் இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து போலீசாரின் செயலை கண்டித்து பொதுமக்கள் வி.களத்தூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர்.


அவர்களுக்கு ஆதரவாக பாஜகவினரும் இந்து முன்னணி அமைப்பினரும் முற்றுகை போராட்டத்திற்கும் கலந்து கொண்டனர். அந்த ஆர்ப்பாட்டத்தில் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது, இதனைத் தொடர்ந்து காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் இந்து முன்னணியினர் என 24 பெண்கள் உட்பட 47 பேரை போலீசார் கைது செய்து திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சின்னாறு பகுதியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.


இதன் காரணமாக பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் கிராமத்தில் பதட்டம் நிலவி வருகிறது, இது தொடர்பாக அங்கிருக்கும் பொதுமக்கள் சிலரிடம் பேசிய பொழுது 'நாங்கள் எங்கள் பண்டிகையை கொண்டாடக் கூடாதா?' ஏன் இப்படி நடந்து கொள்கிறது காவல்துறை? ஏன் அரசு இதனை அனுமதிக்கிறது? என அங்கிருக்கும் மக்கள் கொந்தளித்தனர்.



Next Story
கதிர் தொகுப்பு
Trending News